உப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், செப்டம்பர் 24, 2020

கரிப்புமணி

 

உப்பாக இருப்பதென்று ஆனபிறகு

கைப்பிடியென்ன

மேசைக் கரண்டியென்ன

 

*******************************************

 

கடல் எத்தனை நீளம்

எத்தனை ஆழம்

எத்தனை வேகம்

இருக்கட்டும்

இன்று அளத்தில் உறைந்தாலும்

இருந்திருக்கிறேனே

அந்த நீளத்தில்

ஆழத்தில்

வேகத்தில்

அப்படித்தான் கரிப்பேன்

 

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சற்றேற அதே உப்பு

என்னுடையது
என்னுடையது
என்று எதையெடுத்தாலும்
அதில் கொஞ்சம் தொட்டு ஒட்டிக்கொள்ளவும்
என்னைக்கிள்ளிக் 
கொஞ்சம் ஒட்டிவிடவுமே பழகிவிட்டது
உங்கள் சந்தோஷம் சொல்லும்போது
அந்தக்குமிழ் சிரிப்பின் சாயலில் 
இருந்த தருணத்தையும்
உங்கள் அழுகையின்போது
சற்றேற அதே உப்பு
கரித்த துளியையும்
மீளக்கொண்டுவந்து
பூரணமாவேன்
என்னுடையது அல்லாத உலகத்தை 
ஒரு கண்ணாடிக்கோப்பையாக
மேசைமேல் வைத்து பெருமிதப்படுவீரோ
இருங்கள்
கிளிங்
ஒரு துண்டு மற்றும் என் கீறல்
குருதியும் உப்பு கரிக்கிறது
ஆக இப்போது
அதன் பங்காளியானேன்

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

காலமே நீ வாழி

இங்கேதான் இருக்கிறோம் 
இல்லாமலும் இருக்கிறோம் 
இருக்கும்போதும் 
இல்லாதபோதும்

*****************************************
வருத்தங்களைப் பிட்டுத்தின்றபடியே
ஒரு ஸ்மைலி 
போட வாய்ப்பளிக்கும்காலமே நீ வாழி

**********************************************

உப்பு உறைப்பைச்
சரிபார்த்தபடி முடிகின்றன நாட்கள்
அவர்கள் செய்யும் துரோகங்களைப் பற்றி
நினைக்கும் போது புரையேறுகிறதுதான்
தண்ணீர்க்குவளை அருகில்தானே
போதும்


*****************************************************

கதவு திறக்கப் 
பார்த்திருந்தோம்
வெளியேற
காற்றுகூட இல்லையென உணராது


***********************************************************




வியாழன், செப்டம்பர் 22, 2016

நீங்கள் உங்களைப் போலில்லை

ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கையில்தான் வாழ்கிறோம்
எதையுமே செய்துவிடவில்லை
என்பது புரிந்தாலும்
இனியாவது
ஏதோ செய்துவிடப்போவதான
நம்பிக்கைதான்
எவ்வளவு உவப்பாகஇருக்கிறது
உப்புபோட மறந்துபோன
சாம்பாரில்
பரிமாறலுக்குமுன் கலந்துவிடுவதுபோல்
ஏதாவது செய்துவிட முடிந்தாலாவது......
நம்பிக்கைகள் எளிமையானவை மட்டுமல்ல
கொடுமையானவையும்
****************************************************************
காத்திருத்தல் எவ்வளவு கடினமானது
காலகாலமாகச் சொல்லப்பட்ட
உதாரணங்களாலும்
அனுபவத்தாலும் அறிந்திருக்கிறோம்
எங்கெங்கோ காத்திருப்பவர்களின்
எதிர்பார்ப்புக்கு மாறாக
காத்திருப்பின் சுவையை உணராமல்
எவரோ கரைந்துகொண்டிருக்கிறார்கள்
முறையின்றி
*****************************************************************
யாரைப் போலிருக்கிறீர்கள்
என்று யாராவது சொல்லிக்கொண்டே
இருப்பார்கள்
உங்களைப்போல் இருப்பதாக
எப்போது சொல்வார்களோ என்று
காத்திருந்து காத்திருந்து
இப்போது
நீங்களே உங்களைப் போலில்லை
*************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...