ரசாயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரசாயனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 20, 2019

விண்மீன்கள் பொதிந்த பித்தளைத் தூக்கு

நல்ல அழுத்தமான பித்தளை தூக்கு அது
மூடவும் திறக்கவும் 
தனிக்கவனம் வேண்டுகிற 
அதற்குள்தான் இட்டு வைத்திருந்தேன் 
சரளைக்கல்போற் பருத்த விண்மீன்களை
ஒவ்வொன்றாக எடுத்து 
உள்ளங்கையில் வைத்து 
துணைசேர்த்துக் கண்ணீர்விட
கதறியழ
தனியாகச் சொரியும் கண்ணீருக்கு 
துயர்குறைக்கும் ரசாயனம் சேர்வதில்லை
அந்த விண்மீனுக்கு
சாய்ந்தழும் தோள் அளவு
விஸ்தீரணம் பெருகுமென்பதும்
நீண்டு நீண்டு கன்னக்கறை
துடைக்கும் விரலாக வளருமென்பதும்
என் ரகசியம்
எப்படித் திறப்பதென மறந்த
நான் தட்டித்தட்டி 
நகர்த்திக்கொண்டிருக்கிறேன்
பால்கட்டிய தாய்முலையெனக்
கண்ணீரால் 
கனத்துக்கொண்டிருக்கிறது இதயம்

வெள்ளி, நவம்பர் 04, 2016

விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...