சேறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

அல்லிக்குளக்கரை

நான் என்ன செய்யவேண்டும்
எப்போதும் என்னைவிட
உங்களுக்குத்தான் தெரிகிறது
போலவே நீங்கள் செய்யவேண்டுவது
எனக்குத்தெரியும் என்பதை மறந்துவிடுகிறீர்கள்
அல்லிக்குளத்தின் சேறு
கரையேறுகையில் கழுவியாயிற்று
கரையிலிருக்கும் கால்களின் சேறு....
அதைக்காணாது அல்லிக்கொத்தை ஏந்தி நடப்பேன் 

அதன் சுகந்தம் 
நிறம்போலவே அடர்த்தி


ஞாயிறு, நவம்பர் 13, 2016

நீர்மையற்ற வாழ்வு

உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள் 
அல்லது
அவர்களோடுதான் நீங்களும் 
சரி 
உங்களைப்பற்றி சொன்னால்தான்
உங்களுக்குப்பிடிக்கும்
முதலிலிருந்தே வருகிறேன்
உங்களோடுதான் அவர்களும் இருந்தார்கள்
பொருள் வந்த பொழுதிலோ
பொருளின் பொருளறிந்த பொழுதிலோ 

நிகழ்ந்த நகர்வு அது
நகர்ந்தது நீங்களென்பதால்
அறியாது
எப்போதும்போல் சிரிக்கும்
அந்த முகம் எரிச்சலூட்டுகிறது
அவமானம் தருகிறது
கொஞ்சம் கை கொடுத்தாலென்ன
கேட்கும் குரலும் விரோதமாகிவிடுகிறது
சுற்றிப்பாருங்கள் பாளம் பாளமாய்
வெடிப்பு
நீர்மை காய்ந்த சேறு



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...