மஞ்சள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஞ்சள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 09, 2021

தொடக்கம் எளிது

 ஏ ஃபார்ஆப்பிளை

வரைந்துகொண்டிருக்கும்போதே

மாம்பழ நினைவு வந்து
மஞ்சள் நிறம் தீட்டிய பாப்புக்குட்டி
மஞ்சளின் நினைவில்
சரிபாதியாக சோளத்தைப்போல
மணிகள் வரைந்தாள்
பிறகு பக்கம் முழுக்க நீலம் பூசினாள்
சோளம் வாங்க
கடலுக்குப் போன கதை இப்படியாகத்தான் படமானது
உருக்கிய மெழுகை பத்திரப்படுத்தினேன்
*******************************************************
சரக்கொன்றையென வருத்தங்கள்
உதிர்ந்து கிடக்கின்றன
நிமிருமுன் பூத்தும்
தன்னுடையது
உதிர்ந்துவிட்டதென
ஆசுவாசம் கொள்ளுமுன்
என்ன மஞ்சள்
என்ன மஞ்சள்
**************************************************
தனியாகத்தான் நின்றுகொண்டிருக்கிறது
நிலா
சிரிப்பிலும் அழுகையிலும்
நீ சேர்த்துக்கொள்ளும்போதும்
மறந்துவிடும்போதும்




வியாழன், நவம்பர் 22, 2018

பறத்தல்-இருத்தல்

ஆரஞ்சா மஞ்சளா இது
வண்ணத்துப்பூச்சி
சம உயரச்செடியின் மலர்மேல் 
அலைகிறது
அரவமின்றிக் குனிகிறேன்
புறங்கை வீசித்துரத்துகிறது
ஒருமுறையேனும்
பறந்துவிட்டு வா



**************************************************************














செதுக்கிய யுகந்தாண்டி
தெறித்த துகள்கள் மிதித்து மிதித்து
எடுத்தெறிகையில்
எதிர்ப்படவேயில்லை
உறைந்த சிலையழகு



*******************************************************



செவ்வாய், நவம்பர் 21, 2017

நிறமிலியானவள்

திருத்தமான ஒரு சித்திரத்தை 
வரைந்தே தீர்வதென்றே நீ அமர்கையில் 
கையிருப்பில் வண்ணமேயில்லை 
அதனாலென்ன 
என் பசுமையெலாம் குழைத்தளிப்பேன் 
கசிந்துருகும் உளமஞ்சள்
இளமஞ்சளுக்கீடாகும்
கண்மணியில் நீலக்கீற்று 
கரைத்த சாந்தோ துளிப்பொட்டு
வரைந்து முடித்த ஆசுவாசத்தில் 

நிமிர்ந்தபோது 
ஒரு நிறமிலியாகி நின்று கொண்டிருக்கும் என்னை
இயல்பாக 

கடந்து செல்கிறாய்

********************************************************************

நீ அப்போது வெட்கப்பட்டிருக்க வேண்டும்
என்றார் நண்பர்
அப்படி ஒன்றும் நிகழவில்லை
அது வழக்கமும் இல்லை என்றேன்
வாழ்வின் நுண் கணங்களை இழந்தவள்
எனப் பரிதாபப் பட்டார் 
அப்படி ஒன்றும் தோன்றவில்லை
அதுவே வாழ்வும் இல்லை என்றேன்
ஒரு பெண்
பெண் போல இல்லாது போவதன்
அவலங்கள் குறித்து
அவர் இந்நேரம் 

ஒரு கட்டுரை வரைந்திருக்கக் கூடும்
நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்
வெட்கம் கொள்ளாது போன
மனிதர்களைப் பற்றி
நுண் கணங்களின் வரையறை பற்றி
எங்களை எங்களைப் போலக்
காண முடியாத காரணம் பற்றி ....

வெள்ளி, நவம்பர் 04, 2016

விடமுண்ட கண்டன்

ஆரஞ்சு நிறத்திலான கேசரித்துண்டுகள் 
விருந்தினரை,
வீட்டுக்குழந்தைகளை,
கட்டிகளின்றி கிளறிமுடித்தவளை
என எத்தனை பேரையோ 
பரவசப்படுத்திய காலத்தில்
புறப்பட்டோம்.
அதிகபட்ச உபசாரத்தின் அடையாளமான 

கேசரித்துண்டுகள் மஞ்சள் நிறம்
உற்ற காலை
நாம் கொஞ்சம்
அந்த நிறப்பொடி போலக் 

கொஞ்சமே கொஞ்சம் திடுக்கிட்டோம்.
மூடநெய்பெய்து முழங்கை வழிவார 

சர்க்கரைப்பொங்கல் தின்று சலிப்புற்ற சாமியெல்லாம்
கேசரித்துகள்களில் பசியாறத் தொடங்கியபோது
நமது உலகம் வண்ணமயமாகிவிட்டது
குட்டி குட்டி குப்பிகளில் நிறைந்த
வாசனாதி திரவியங்களும் பொடிகளுமாக 

பொங்கும் நிறங்களில் படைக்க விரும்புகிறோம்.
கேசர்பாதாம்,பிஸ்தா பச்சை,

வாடாமல்லி வண்ணங்களில் ததும்பும் 
பண்டபாத்திரங்களைப் பார்த்து 
பெருமூச்சு விடாதிரும் ஈசனே
இதிலாவது வண்ணங்களைத் தக்கவைக்கிறோம்.
எல்லாம் ரசாயனம்
எம்மைப்போல் குடல் பெறவில்லை
நீர்



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...