வண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

மனக்கொடி

மெல்லிய கோடுகளுக்கிடையிலோ 
சின்னப் புள்ளிகளுக்கிடையிலோ 
பரப்பாத வண்ணம் 
அரூபமாய்
அவரவர் எண்ணப்படி நிரப்ப ஏலுமோ

******************************************************
ஊறிக்கொண்டே வரும் நினைவுகளை உலர்த்தவும்
மனக்கொடி
நனைத்திடும் அதேபிடி

************************************************************
நீலவானத்துக்குள் நிறைந்த மனமே 
சாம்பல் கண்டு வெம்பாதிரு
நீலமே இயல்பு
நீலமே இருப்பு

***********************************************************

ஞாயிறு, ஜூலை 21, 2013

வேறு இடம் தேடி


பொறாமை பொன்னிறம் கொண்டதென்றும்
இறுமாப்புதான்
இளஞ்சிவப்பின் அடையாளமென்றும்
பரபரப்பின் குறியீடு பச்சை ,
மமதைக்கு மஞ்சள் ...
ஆறாக் குரோதம் ஆரஞ்சுப் பின்னணி
குழைவும் கோடுகளும்
வளையும்
சாத்தானின் ஓவிய வகுப்பில்
தலை மாணாக்கராய் இருப்பது
சுலபமல்ல ...,
ஒவ்வொரு கணமும்
மொட்டு விரியும் ரோஜாக்கொத்தைக்
கண்டுகொள்ளாமல் கடக்கும்
வண்ணம்
உன் புலன்களின்
திறமிழந்து பெற வேண்டும் அந்த இடம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...