அவுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவுரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 27, 2021

கைகளைக் கழுவ விடுங்கள்

 

நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள்
நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள்
அவுரி கண்ட மண்ணுக்கு
ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு
உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது
நகரும் கால்களில்
உங்களுடையது
நான்காமிடமோ
நாற்பதாமிடமோ
உடைமை என்பதே பெருஞ்சுமை
அதை இறக்கத்தானே
இத்தனை பாடு
*********"*
நைச்சிய சொற்களின்
அடையாளம்
நாளும் களைபறித்த
கண்களறியாதா
கொழுமுனை கீறிய நிலத்துக்குள்
புதையட்டும்
பொய்ம்மையின் பசப்பல்
வரலாறு
எல்லாவற்றையும் பிடுங்கிப்பிடுங்கி
உருட்டி உருட்டி
நாலாய் எட்டாய் மடித்து விழுங்க
எங்கள் வாழ்வென்ன
உங்கள் அம்மைசுட்ட ரொட்டியா
விழுங்கும்வேகத்தில்
ஒரு விக்கல் வந்தாவது
நினைவூட்டாதா
தொண்டைக்குக்கீழே
எல்லாம் ஒன்று
எல்லார்க்கும் ஒன்று என்று
பக்கத்திலிருக்கும்
முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது
எங்களுடையது
கஞ்சி
உங்களது
பாரிட்ஜ்
உண்டு கழுவ விரும்பும் கைகளையுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

பெயர்ப்பலகையின் பூச்சரம்

உப்புக்கடலை ருசிக்காமல் 
சிப்பி தேடிக் கொண்டே 
அலைகிறாய் 
மீனென்றும் சொல்கிறாய் 
ஏதாவது ஒன்றைத்தான் புரிந்து கொள்ள 
முடியும்


**************************************************
நீலமாய் இல்லாத அவுரி
நீலம் தருகிறது
வானென்று
சொல்வதையும்
கடலென்று சொல்வதையும்
நிறுத்தி
அவுரி என அழைக்கிறேன்.
இருப்பதல்ல பெறுவது நீலம்
என உணர்ந்தபிறகு


*******************************************
எப்படிச் சொல்வீர்கள்
தினந்தோறும் கடக்கும் பாதையின்
பெயர்ப்பலகையும்
அதில் தொங்கும் வாடிய சரமும்
யாரை நினைவூட்டுமென்று 
அவரவர்க்கு அவரவர் கிளை


****************************************************
இதழ் இதழாய்ப் பிய்த்து மெல்லுகிறவரிடம்
என்ன சொல்ல
என் மனதுக்கு சொல்லிக் கொள்கிறேன்
சாந்தி ...சாந்தி...சாந்தி


******************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...