சாத்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாத்தான் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 02, 2020

சுவடுகளை விழுங்குதல்

 

தெரியும்
திறந்துகிடக்கும் வாசலைத் தாண்டி
சுவடின்றி நீ கடந்தாலும்
அது எப்படியோ தெரியும்
உனக்கும்

 

************************************************

 

 

கூடத்தில் படிந்துவிடும்
மணல்பார்த்து
ஆச்சர்யந்தான்
அதுவும் திகைத்துப் போய்விடுகிறது

கூட்டிக்குவித்ததும்



******************************************

 

 

எனது கடவுள் இவன்தான்
எனது சாத்தான் இவன்தான்
எனது மது  இதுதான்
எனது விஷம் இதுதான்
வரையறுத்துவிடவே முடியவில்லை

முடியவில்லையா

தெரியவில்லையா

தெரியவில்லை

 

புதன், செப்டம்பர் 25, 2019

வரிசைகளின் அடுக்கு

ஒரு குருவி
ஒரு அணில்
ஒன்றுமாற்றி ஒன்று
ஏறி இறங்கித் தாவிக்கொண்டிருக்கின்றன
கைப்பிடிச் சுவரில் பதிந்திருக்கும் 
கண்ணாடித்துண்டு மேல்
என் அச்சம்

 *********************************************************
சேனை நடந்த பாதையின் இடிகற்கள்
கலங்கல் குட்டையின்மேல்
ஒவ்வொன்றாய் நீ போட்டவைதானோ

*********************************************************
வரிசைகளின் அடுக்குக்குள் மூச்சு முட்டுகிறது
உலர்த்திய சிறகுகள்
காற்றில் அலைகின்றன
எதுவாக இருக்கிறோமென்ற குழப்பம் தீர்வதற்குள்
ஹா...அடைபட்டாய் கூண்டில்!
பறந்துவிடுவாயோ எனும்
சந்தேகம் உன் இருப்பின் கிரீடமானது.

********************************************************
சாத்தான் இருப்பதை நம்பவைக்க
ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறாய் தேவனே
ஒரு அடிபட்ட புறாவுக்கு 

பெருஞ்சேனை அனுப்பித்தாக்கும் உன்னை
நம்புகையில்
அவனும் நீயும் வேறெனப்
பிரிப்பதுண்டோ


********************************************
பொழுதுபோகாமல் 
வண்ணத்துப்பூச்சிகளைப் 
பிய்த்துப் போட்டுக்கொண்டிருக்கும் பாத்திரத்தையே 
பிச்சைகோரி நீட்டுகிறாயே
என்னிடம் எதிர்பார்ப்பதென்ன
கருணையையா


*********************************************************


ஞாயிறு, ஜூலை 21, 2013

வேறு இடம் தேடி


பொறாமை பொன்னிறம் கொண்டதென்றும்
இறுமாப்புதான்
இளஞ்சிவப்பின் அடையாளமென்றும்
பரபரப்பின் குறியீடு பச்சை ,
மமதைக்கு மஞ்சள் ...
ஆறாக் குரோதம் ஆரஞ்சுப் பின்னணி
குழைவும் கோடுகளும்
வளையும்
சாத்தானின் ஓவிய வகுப்பில்
தலை மாணாக்கராய் இருப்பது
சுலபமல்ல ...,
ஒவ்வொரு கணமும்
மொட்டு விரியும் ரோஜாக்கொத்தைக்
கண்டுகொள்ளாமல் கடக்கும்
வண்ணம்
உன் புலன்களின்
திறமிழந்து பெற வேண்டும் அந்த இடம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...