காட்டாமணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காட்டாமணக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 20, 2019

பத்தடிக்கு இந்தப்புறம் செண்பகம்



அழுதேன் அன்று என்றாள் ஒரு தோழி
ஒன்றும் பேசாமல் 
மேசைமேல் வேகமாக நடனமிட்டுக்கொண்டிருந்த
 நண்பனின் விரல்கள்
நானும் நானும் என்றன
கோணலான ஒரு புன்னகையைச் சிந்தியபடி 
நீ கேட்டுக்கொண்டிருந்தாய்
அதுவும் கண்ணீரின் மொழிபெயர்ப்புதானே

**********************************************************************
என் வாசலில் 
ஒரு செண்பகக் கன்று வைத்திருக்கிறேன்
அது எப்படி மலரும் என்ற நினைவுகளிலும் 
அத்துணை வாசம்
இளமஞ்சளான வெள்ளை,சந்தனம்,
நன்மஞ்சள் என 
எங்கெங்கோ நான் கண்ட 
செண்பக மலர்களின் நிறச்சாயலை 
ஒருசேர ஒவ்வொரு கிளையிலும் காண்கிறேன்
எவனோ மூக்கு சிந்தி எறிகிறான்
தெருவின் அகலம் பத்தடி
அந்தப்பக்கம் நிற்கும் காட்டாமணக்கும்
என் செண்பகமும் 
அவனுக்கு செடிதான்
மூக்கு சிந்துவதிலெல்லாம் மிடுக்கை நிரூபிக்கும் 
அவனோடும் 
நான் பகிரத்தான் வேண்டியிருக்கிறது
என் பத்தடி உரிமையை
     

புதன், ஏப்ரல் 20, 2016

பிரசங்கிகளின் உலகம்

consumerismகாட்டாமணக்கு மொக்கு கூட
அழகாத்தான் இருக்கிறது படத்தில்
சோடா விளம்பரமல்ல எனத்
தெரிந்தேதான் பார்க்கிறீர்கள்
மோட்சத்தைப் பற்றி கதைத்தபடியே
அவர்கள் கரங்கள் கரன்சிகளை அடுக்குகின்றன
செங்கல்லைத் தின்ன முடியாது தவிக்க நேராமல்
மனை விற்ற மறுநிமிடம்
பிட்சா கிளை திறந்தார்கள்
மெதுவாகச் செல்லும் ரயில்கள்
அடுத்தவனோடு
பேசுமளவு நேரம் தரக்கூடும் என்ற தொல்லையால்
பறக்கின்றன.
முடிந்தால் வாழலாம்.
எது முடிந்தால் என்னாதே அதிகப் பிரசங்கி
இது
பிரசங்கிகளின் உலகம்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...