ஞாயிறு, நவம்பர் 25, 2012

நாளையும் வரக்கூடிய பரிசுப்பொதி



ஒரு காலையைப்
பரிசாக அனுப்பியிருந்தார்கள்...                      
வெளிச்சத் தாள் பளபளப்பில் 
பொதியைப் பிரித்தேன் ,...
தெர்மகோலில் செய்த புன்னகை...
சின்னக் கண்ணாடிப் பேழையில் 
நம்பிக்கை..,
உதிரி சாக்லேட்டுகளாய்
சந்தோஷங்கள்..,
பரிசு நியதியை மீறாமல் 
என் நேரம் ஏந்திய கடிகாரம்..,
பானம் தயாரிக்க நினைவூட்டிய 
அரை டஜன் கோப்பைகள்..,
இடம் நிறைத்த 
உதிரித்தாள் உரையாடல்கள்..,
இந்தக் களேபரத்தில் 
நல்லவேளையாய் உடையவில்லை 
கனவுப் பூ பொம்மையின் 
இதழ்கள்...
எல்லாவற்றுக்கும் பக்கமாய்த்தான் 
கிடக்கிறது 
இறுக முடிந்திருந்து 
நான் கத்தரித்த இருள் நாடா...!  

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...