முள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
முள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

இலை அழுத துளி

அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன் 
என்கிற 
உன் சொல்லில் நிற்கிறது முள்

*****************************************************

செம்மண் பள்ளமெங்கும் நீர்
இறைத்து ஊறியதோ
இரைந்து ஊறியதோ
***********************************************
சரளைக்கல் நொறுங்க நொறுங்க 
குறுக்கு மறுக்காக 
ஓடிக்கொண்டிருக்கின்றன சக்கரங்கள்
பூசி மெழுகியபின் வரலாம்
உறுத்தாது
*******************************************************

எத்தனை துளிர்க்கையிலும் 
மலரா முகத்துக்காக 
இலை அழுத துளி 
மழை மாலையில்
************************************************************
ஒரு இளஞ்சிரிப்போடு
கடந்துவிடுகிறீர்கள் பேரன்பை
கொடுஞ்சொற்களுக்கு தாரை வார்க்க 
முழு இரவை ஏந்தியபடி
***************************************************
உரசுகிறது வேர்
துண்டுப்பலகையின் துணையில் 
பள்ளத்தைக் கடக்க முடிகையில்
*****************************************************************




திங்கள், அக்டோபர் 15, 2018

குவளையால் நிரம்பும் ஆறு

வலிகளையும் நினைவுகளையும் 
இருபுறமும் இட்டு 
முள்ஆடுகிறது
இப்புறமும் அப்புறமும்
************************************************
எல்லாவற்றையும் ஏற்றிஅனுப்பிவிடலாம்
ஒரே தோணியில்
இந்தக்குவளையால் ஆற்றை நிரப்பியபிறகு

*******************************************************
வயலுக்குச்சென்று வருமுன் 
எழும்பிவிட்ட புதிய சுவரின்முன் 
தவிக்கிறது கிணற்றுத்தவளை
உங்களுக்குப் புதிய நடனம் பிடித்திருக்கிறது

*********************************************************
மரத்தை எடுத்துச்செல்ல 
இயலாப்பறவை
பிரதிசெய்கிறது சுள்ளிக்குச்சியால்
**************************************************************
தற்செயலாக உதிரும்பூக்களைப் 
பார்த்து 
திசைமாறுகிறது காற்று
எட்டித்திருப்புகிறது உன்நிழல்
********************************************************

புதன், ஜூலை 06, 2016

செம்பருத்தி

புரிந்திருக்கும் என்ற
நம்பிக்கையை
ஒரு உச்சு 
இடித்து நசுக்கிவிடுகிறது
அது போக
அடியிலிருந்து சிதிலம் உதறி
எப்போ தலைதூக்க

*********************************************
இவ்வளவுதானே
இதற்குள் எதற்கு
அவ்வளவு

**************************************************
நடந்துவிடும் என்ற நம்பிக்கை
ஓடுடைத்துக் கொண்டிருக்கையில்
சிறகின் கோதுகளில்
முள்வைத்துத் தைக்கிறாயோ

**********************************************************
அந்த மீன்குஞ்சு
மரமேறுவதைப் பார்த்தேன்
பழம் பறித்து இறங்கியதோ
பழமாகித் தொங்கியதோ

********************************************************
இவ்வளவு இலைகளைப்
போர்த்திக்கொண்டு
உறங்கிய செம்பருத்தி
உதிர்ந்தபின்
பூத்திருந்த காட்சியை
ஊகித்து ஊகித்து....
பூத்திருந்தபோது ஒருவர் கண்ணிலாவது பட்டிருக்கலாம்

******************************************************************************

உதிர்த்துவிட ஏதுமிலா
சரஞ்சரமான கிளைகளோடு நிற்கையிலும்
அலைக்கழிப்புக்குக் குறைவில்லை



வியாழன், ஜனவரி 21, 2016

ஜனவரிப்பூக்கள் -2

முள்ளிருக்கிறது என்ற நினைப்பில்
ஓரக்கண் பார்வையோடு கடந்துவிட்ட
ஆரஞ்சுப்பூங்கொத்தைத் தயங்காது 
வளைத்துப்பறித்து
முகத்தோடு உரசியபடி
ஏழாவதுவயதில்போல
மென்குதிநடையோடு போக
இந்த முகம்தான் தடைஎனில்
கொஞ்சம்நில்லுங்கள்
சற்றேதிருகி எடுத்துத் தந்துவிடுகிறேன்


************************************************
உலர்ந்த கேள்விகள் 
கொடிக்கம்பியில் சேர்ந்துகொண்டேபோகின்றன
கிளிப்பே துணை
கிளியை நினைத்தீர்களா என்ன
உங்கள் நினைப்பிலும்
இந்தப்பிழைப்பிலும் வீசுகிறதுகாற்று


*******************************************
வாய்மூடி நகர்வதில் பிழையில்லை 
உனக்குத் தெரியாது 
உனக்குப் புரியவில்லை 
என்று சமாதானித்துக் கொள்வதில்
சிரமமில்லை
உதட்டைச்சுழித்தபடி மட்டும்போகாதே

***********************************************
நொண்டிக்கொண்டிருந்த அந்த நாய்க்குட்டி
அப்படியாகவே நினைவின் சித்திரத்தில்
தங்கிவிட்டது
அபூர்வ விருந்தாளியாக வந்தவருக்கு
அதுவோ 
கால்ஆறி,வயதேறி ,நுரைதள்ளி
வண்டியிலும் ஏறிப்போய்விட்டது
விசாரித்தபோது
துரத்திய நாள்தவிர்த்து
சொல்லிமுடித்தோம்

********************************************************
மறந்திருக்கும் எனநினைத்ததை
நினைத்திருப்பதும்
நினைவிருக்கும் எனநம்பியதை
மறந்திருப்பதும்
சுவாரசியம்.

அசுவாரசியமாகவும் இருக்கலாம்
***************************************************


புதன், மே 08, 2013

மலர்வது.... முள்ளா ?




ஆன்மாவின் சிறகுகளுக்கு
வண்ணம் பூசுவது
வழக்கம் இல்லைஎன்கிறாய் 


அம்புகளின் நுனியிலும்
மலரிணைத்தே விடுப்பவள் நான்..


துப்பும் நிறத்தையே
அடையாளமாக அணிந்திடும்
மொட்டுகளுக்கு
குழப்பம் தருவதே
உன் வழக்கமாகிவிட்டது...


உன்,என்,
வழக்கங்களை மீறியும்
சிரிக்கிறது பூ...
கூடவே அதன் முள்ளும்...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...