கறிவேப்பிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கறிவேப்பிலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 27, 2021

நேடிவ்

 ஒருநாள்

ஒரே ஒருநாள்
விட்டுவிட்டுப் போனால்
முகத்தைத் திருப்பிக் கொள்கிறது வீடு
நேடிவ் போயிருந்தேங்க
அலைபேசியில் சொல்லிக்கொண்டே நடக்கும்போது
தலையில் நிலை இடித்தாற் போலிருந்தது
சொன்னவுடன்
சொல்கிறாள் தோழி
நீ பாட்டுக்கு ஊர்வீடு போல
நாமதான் குனியாம வந்துட்டோம்னு நினைக்காதே
எனக்கென்ன குறைச்சல்
கறிவேப்பிலைக்கொத்தேன்னு
நிலைதான் இறங்கிக்குட்டியிருக்கும்
இப்போது நானென்ன செய்ய
நம்புவதா
இன்னொரு முறை
"நேடிவ்ல ...."
சொல்லிப் பரீட்சிப்பதா

புதன், அக்டோபர் 07, 2020

தூரத்தில் வேர் நுனி

புதிய பசிய கறிவேப்பிலையை ஈர்க்கிலிருந்து சரசரவென உருவி கொழுந்துமல்லித் தழைகளையும் சேர்த்துக் கொதிக்கும் ரசத்தில் போடும் கையா

நீரூற்றிக் களையெடுத்தது *********************************************
மழுமழுவென மின்னும் பீங்கான்
தொட்டியிலிருந்து கிள்ளிவந்த மணிபிளாண்டுக்கு
பழைய பால் பாட்டிலோடும் பேதமில்லை
*********************************************

நட்சத்திரம் இறைந்த துப்பட்டா வாங்கியபோது நினைக்கவில்லை
வானத்தை இப்படிப் போர்த்திக் கொள்ளமுடியுமென்று ************************************** தினம் நடக்கிற வழிதான்
தினம் வருகிற வெயில்தான்
என்றாவதுதான்
நிமிர்ந்து பார்க்க வாய்க்கிறது
கை வைத்து மறைத்தபடியாயினும்
*************************************
விதைத்தது நீ என்று உலகு அறியும்
வேரின் நுனி
உன் கையில்
என்ற ரகசியம் எனக்கு மட்டும்

சனி, நவம்பர் 03, 2018

நினைவில் வளரும் கறிவேப்பிலைச் செடி

கையை மாற்றி மாற்றிப் பற்றிக் கொண்டோம்
சுந்தரி டீச்சர் தொடங்கி 
நெட்டை கீதா குட்டை கீதா
நாங்கள் முதன்முதலில் பார்த்த
தேன்மிட்டாய்காரர் வீட்டு கிளிக்கூண்டு
ஒரு முழத்துக்குமேல் 
எப்போதும் வளராத கறிவேப்பிலைச்செடி

தெப்பக்குளக்கரை வளையல்கடை
கட்டுரைநோட்டு அடுக்கை
சாலைக்கு எதிர்புற வகுப்பறைக்கு 
எடுத்துச்செல்கையில் தவறவிட்டது

ஆச்சே....இருவது வருசம்கிட்ட
......ஒரு வருசம் பேசலாம் நம்ப கதைய 
எனச்சிரித்தபடி நகர்ந்தோம்
அப்புறம்தான் நினைவு வந்தது
வீட்டைச்சொல்லாது விடை பெற்றதும்
அவள் நெற்றித் தழும்பு
இப்போதும் தெரிந்ததும்....


மறந்துவிடாமல் குனிந்து நிலை தாண்டினேன்

அக்டோபர் 14 காமதேனுவில் 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...