பொம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பொம்மை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 30, 2021

காட்சித் தட்டு பொம்மைகளின் உரையாடல்

 யாரும் வராத வீடுகளில்

சோபாக்களின் மேல்
நாற்காலிகள் கால் நீட்டிக்கொள்கின்றன
அடுத்தடுத்து தொங்கும்
புகைப்படங்கள்
திரும்பி
எதிர் எதிராக உட்கார்ந்து
கதைக்கத் தொடங்குகின்றன
காட்சிப் பேழையின் பொம்மைகள்
கைகளை உதறிச் சொடுக்கு எடுத்துக் கொள்கின்றன
அதிலொன்று
துறுதுறுவென்று
கேட்கிறது...
மறைமுகமா என்ன சொல்றாங்க
இந்தக் கதவு திறக்க முடியுமா இல்லையா
முன்னாளில் அவ்வீட்டுக் குழந்தை விளையாடி
இப்போது காட்சித்தட்டுக்குக்
குடிவந்துவிட்ட கரடி பொம்மை
இரு இரு...
நானே அவனுக்கு விசா கிடைக்குமோ இல்லையோன்னு இருக்கேன்...
வீட்டுத்தலைவி மெல்ல வந்து சின்னத்திரைக்கு உயிரூட்டுகிறாள்...
போச்சு..
ஒண்ணும் புரியப்போறதில்லை
ஊரடங்கா..
ஊரடங்கு மாதிரியா
கிசுகிசுத்துக் கொள்கின்றன பொம்மைகள்

புதன், ஏப்ரல் 10, 2019

வேரடி கூழாங்கல்

இளங்காற்று வீசியபோது
பொம்மைகளைத் தேடிக்கொண்டிருந்தேன்
ஒருவழியாக எடுத்துவைத்த பொம்மை 
என் கையைப் பிடித்து 
விசிறிக் கொண்டபோதுதான்
புலப்பட்டது
அத்தனை வெக்கை

**************************************************************
அந்தவழியாகப் போவது 
அந்தநாள் வழியாகப் போவது என்றே நினைத்தோம்
போகும்போது 
புலப்படவில்லை 
அந்தவழியோ நாளோ
நினைப்புத்தான்


*******************************************************************
இலைகளற்று நிற்கும் பெருமரத்தின்
காலடியில் சலசலத்து ஓடும்
நதியிடம் கேட்க 

நூறாயிரம் கேள்விகள் இருந்தன
உருண்டுவந்த கூழாங்கல் 

வேரடியில் சிக்கிநின்ற தருணம்
கேள்விகள் மறந்துபோயிற்று


வெள்ளி, அக்டோபர் 14, 2016

காலம் தப்பிய காலம்

ஆகாயத்தின் நிறம்
 மாற்றியே தீருவேன் என 
உதைத்துக்கொண்டு அழுதிருக்கலாம்
எதிரிலிருப்பவர் கையில் 
என்ன இருக்கிறது என கூச்சப்படாமல்
காட்டச்சொல்லியிருக்கலாம்
பொம்மைகளை 
விட்டுக்கொடுக்காது காத்திருக்கலாம்
பூச்சிக்கும் பாம்புக்கும் 
பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது
முக்கியமாக
எப்போதும் ஒரேமாதிரி 

சிரிக்கவும் அழவும் முடிந்திருக்கும்
என்ன செய்ய
குழந்தையாக இருப்பது 

குறுகிய காலத்துக்கே அனுமதிக்கப்படுகிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...