அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அருவி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 09, 2019

போங்காட்டம்




நல்லாயிருக்கே உன் விதி
அருவி பாட்டுக்குத்
தலைகீழா விழுமாம்
நனைந்து தலை உதறி துண்டு பிழிந்து கரையேற நீ
குச்சி வைத்து தட்டி
ஒழுங்குபடுத்துகிறேன் பேர்வழியென \
துளிதண்ணீரை உடம்பு ருசிக்காமல் 
அலைய நானா
காடு மணந்து கிடக்குமாம்
பூப்பூவாய் மகரந்தத்தை
இழுப்பிக்கொண்டு
தேனுறிஞ்சிப்பறக்க நீ
என்றோ காய்ந்த பட்டையை
உரித்துப்போடக்கூட
ஆளில்லாத பட்டமரமாக
பட்டாம்பூச்சியைத் தொட்டறியாது 
நிற்க நானா
இதெல்லாம்
கருக்குழியில் தள்ளி களத்தில் இறக்கிவிட்டா
சொல்வது
வருமுன்னர் சொல்லியிருந்தால்
இந்த ஆட்டத்துக்கு நான்
சரிப்படமாட்டேனென மறுத்திருப்பேனே


செவ்வாய், ஜூன் 11, 2019

குமிழ் மூடிய அருவி

ஒளிர்பூங்கண்களின்
சிரிப்பைச் செவிமடுக்க
உன் இரைச்சலை
முழுக்குமிழும் திருகி மூடினாயல்லவா
அப்போது முதல் வீழ்கிறது
இந்த அன்பின் பேரருவி
நதிமூலம்
கண்டடைவாயாக


**********************************************************
தட்டையான பார்வையால்
புரிந்துகொள்ள
முடியாதது
என் வெறித்த நோக்கின் வலிமை
என் வாசல் தும்பையின் அழகு
மற்றும்
அடைத்த கதவத்தினுள் பரவும்
ஒளி


**********************************************************
ஒரு கைப்பிடி பழஞ்சோறு
வைக்கத் தேடுகிறாய்
பூங்குயில் வரிசை

எதிர்மதில் காகம்தான்
இவ்விடம் வரும்
இதனைத்தொடும்
என்பது எப்போது புரியுமோ
*************************************************
பாடம் செய்யப்பட்ட
இலைகள்
பாடம் செய்யப்பட்ட வண்டு
பாடம் செய்யப்பட்ட
மனது
எழுதி முடிக்க வேண்டும்
**************************************************
நின்றுகொண்டே இருக்கிறோம்
பங்கிடப்படாத அன்புக்கு வெளியே
பொங்கி வழியும் குரோதத்தின் எதிரே
இறைந்து கிடக்கும் அலட்சியத்தின் நடுவே
உதிர்ந்து மூடும் புறக்கணிப்பின் அடியில்
கால்கடுக்க
ஏக்கத்தோடு நின்று கொண்டேயிருக்கிறோம்
அவர்கள் கண்ணைக் கட்டியிருக்கும் 
காந்தாரித் திரை விலகாதா என்று


திங்கள், அக்டோபர் 15, 2018

அருவியின் நினைவு

அருவியின் நினைவில்
நனைந்துகொண்டவள்
உதறிக்கொண்டாள்
உலர் தலையை
****************************************
முன்னறையின் இருக்கைகளில் 
ஜாக்கிரதையாகப் போட்டுவைத்த 
அலங்கார விரிப்பு 
நீங்கள் எழுந்தபின் 
தானே சோம்பல்முறித்து நீவிக்கொள்ளும்

*******************************************************
கால்வைக்கவும் அச்சமாயிருக்கிறது 
மழைத்தூய்மையில் முறுவலிக்கும் 
உன்முற்றத்தில்
*****************************************************
உங்களால் நம்பமுடியாது
உரு ஒன்றில் உள்ளம் 
திருவாகவும் மறுவாகவும் இருப்பதையும்
மருகி மருகி
வேறு உருவானதையும்.
ஒன்றையே நினைத்திருப்பீர்
எதிர்முகங்குறித்த மட்டில்*
*******************************************************
வருகிறாயா வருகிறாயா என்று  
எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருக்கும் 
போதெல்லாம் நீர்வார்த்த செடி இது
நல்ல மணம்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...