மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மின்னல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஆகஸ்ட் 31, 2017

மழை பெய்து கொண்டிருக்கிறது

மழை வந்துவிடும் போலத்தான்
இருந்தது
இடி இடிக்கத்துவங்கியது
'ரொம்ப பயமாருந்தா அர்ச்சுனா சொல்லு"
மின்னலின் கீற்று சன்னல்வழி நுழைந்து
அலமாரித்தூசியைச்
சரித்து விட்டது
கிளிப்புகள் தாங்காவிட்டால்
என்ற கேள்வியைத் தட்டிவிட்டுப்போனது காற்று
மொட்டை மாடித்துணிகளோடு
திரும்பி வந்த கணம்
மழை இவ்வளவு லௌகீகமாகிய
சோகம் இறங்கியது
வியர்வை பெருக கால்நீட்டி அமர்ந்தபோது
எல்லாம் முடிந்து போயிருந்தது



புதன், மார்ச் 30, 2016

மார்ச் பூக்கள்

ஒளிச்சுடர் என்னைக்கடந்து செல்கிறது ஆரஞ்சு தளும்ப
மஞ்சள் மின்னலை 
எதிர்நோக்கிய கண்களோ
பாதையில் அலைபாய்கின்றன
******************************************
குவிந்த கரங்களுக்குள்
பொன்வண்டு 
சிறகடிப்பதை நிறுத்தாது
தீப்பெட்டி சதமில்லை 
சிறகுக்கு
சொல்லிக் கொண்டுதான்
இருக்கிறேன்
உயர்ரக தினை மற்றும்
கத்தரி என்வசமுண்டு என

**************************************
வெயில் இறங்கி இறங்கி 
முற்றத்தையும்
வாசலையும் விட்டு 
வெளியேறி 
தெருவின் அடியில்
படுத்துக்கொள்ளத்தானே
போகிறது.
அதை நினைத்து
துடைத்திடு
வியர்வை அல்லது கண்ணீர்



ஞாயிறு, நவம்பர் 08, 2015

குடை என்ற குறியீடு

மழை என்னை விரி என்றது
இருள் என்னை விளி என்றது
நான் முந்தி
நீ முந்தி
ஒரு துயரப்பாடலை
இடை நிறுத்திவிட்டு திடீரென
பெருங்குரலெடுக்கிறது காற்று
முகம் தெரியாதிருப்பதை எண்ணி
சிலிர்த்துக் கொள்கிறது
வேலியோரச் சிறுகொடி
பற்றிக்கொள்ளாமல் விட்டுவிட்ட
குடை
ஆனந்தமாகத் தாவிவட்டமிட்டு
தலைகீழாக மிதக்கிறது
அந்தக்குடைக்குவண்ணமில்லை
மின்னல் அது குடைஎனச் சொல்லியது
அவ்வளவே
உரிமைகோராசுதந்திரத்தின் கீற்று
அத்துணைஅழகாய்இருந்தது
யாரும்எனதென்று
சொல்லிவிடும்முன் நகர்ந்துவிடல்நலம்
நானோ
குடையோ

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...