வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வரலாறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

சிராத்துண்டு வரலாறு

 யாரோ நாற்காலி பற்றி

எழுதியிருக்கிறார்கள்

நாற்காலி படங்களாகக் காட்டி
என் விருப்பம் கேட்கிறது
இணையம்
இரண்டுபேர் உட்காரத்தக்க
அகலத்தின்
பழகிப்பழகிக் கருத்த
எங்கள் மரநாற்காலி
யார் யாரையோ உட்கார்த்தி
இறுதிப்பயணம் போன வரலாறு
ஒருநாள்
அடுப்பெரிக்கும் சிராத்துண்டாகி
முடிந்தபோது
அவ்வளவு மழமழப்பும்
உடையுமா எரியுமா
என வியந்த எங்கள் விழிகளுக்குள்
இவ்வளவு ஆண்டும்
உறுத்திக் கொண்டிருப்பது
இன்றுதான் தெரிகிறது

வெள்ளி, அக்டோபர் 14, 2016

செதுக்க முடியாதவை

இரண்டுநிமிடங்கள் முன்னதாக
 உன் அழைப்பு வந்து நின்றதாக 
அலைபேசி சொல்கிறது
இரண்டு நிமிடங்களுக்கு முன்
இங்கேயே இருந்ததாக மனசும் அறிவும் 
சேர்ந்தே சொல்கிறது
கேட்டதா கேட்கவில்லையா
கேட்பாய்


இரண்டு நிமிடத்துக்குமுன்
என்ன நடந்ததென்று மறந்து போகிறதே
இந்த வரலாறு எப்படித்தான் எழுதப்படும்


எவ்வளவைத்தான் தஞ்சாவூர்க்
கல்வெட்டில் செதுக்கி வைப்பது


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...