oli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
oli லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, பிப்ரவரி 19, 2012

வரமளிக்க காத்திருக்கும் தெய்வம்



இருள் கவிந்த இதயத்தில்
ஒளி
பரவக்காத்திருக்கிறது
ஜன்னல் சதுரம்...
பால்கனியின் கொடித்துணி .....
எதையும்
தாண்டிவரத் தயாராக ,
உன் கண் திறக்கக்
காத்திருக்கிறது!
ஒருவேளை நேரடியாக
'வெளி '- யின்
தரிசனம் தேடி
வெளியே வந்தால்
நேர்க்கோட்டு மின்னலாக
ஊடறுத்துப் பாயவும்
தயார்...
எழப் பிரியப்படாத
பூனையின் பசியோடு
இதயத்தை
தட்டிக்கொடுத்துக் கொண்டிருக்கிறாய்
எனத் தெரியாது காத்திருக்கும்
அது
நீ சோம்பல் முறிக்கையில்
தேநீர் அருந்தப் போய்விடலாம் . 

திங்கள், ஜனவரி 16, 2012

நிரம்பா அரங்கம்





ஓரிருவர் ...
தொடர்பிலா திக்குகளில்.... 
அலைபேசி நோக்கியவாறு 
சில தலைகள் 
அருகே எவருமிலா 
மூலைஇருக்கையை 
கவனிக்க வசதிஎனத் 
தேர்ந்திருக்கலாம் .
தாமதமாக
சபை நிரம்பலாம்...
**************************************
எந்த சமாதானமும் 
தராத நிம்மதியை 
காலி இருக்கைகளுக்கும் 
காதுகள் இருக்கலாம் 
என்ற கற்பனை தந்தது...
இருக்கைதோறும்
கைப்பிடிபோல் 
ஈரிரு காதுகள் முளைத்தன ...... 
காத்திருக்கும் செவிகள் 
மீதான காதல்  
தூறலாய்த் தொடங்கி 
பெருமழையென நனைத்தது 
ஆளில்லா இருக்கைகளையும் .......
 

சனி, ஜனவரி 14, 2012

ஒளியே வாழி!

ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம் 
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

புதன், டிசம்பர் 21, 2011

ஆயுத எழுத்து

ம்ம் ...ம்ம்ஹும் ...
எழுத்து உணர்த்தா குறிப்பு
சொல்ல
வேண்டும்
முகக்குறிப்போ தெறிப்போ......
ம்ம் ....உதிராத
ஊமைப்பொழுதிலும்
உயிர்தரிக்கும் துணையின் 
ம்ம்க்கும் ...
நொடிக்குள் 
நொடித்துப் போகிறது  
உன் 
சாம்ராஜ்யம்!
முதலில் அவளும் அறியாள்
இதன் வலிமை.....!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...