வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வனம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

என்னில் நான்

கல்லாயிருப்பதும் கருணையோடிருப்பதும்
வெந்து தணிவதும் 
வேறாய்ப் போவதும் 
உடைவதும் 
இறுகுவதும் ஓர் மனமெனில் 
ஒற்றைச்சொல்லில் நிறுப்பதெப்படி


**********************************************************
எண்-ணிடத் தெரியாதவரை
முதல் தரு அறிய மாட்டேன்
சுற்றி சுற்றித்தான் வரவேண்டும் வனத்தை

*************************************************************
என்மேல் என்னைப்பூசிவைத்து
அந்த என்மேல் என்னைச்சுற்றிவைத்து
அந்த என்னையும் உறையிலிட்டு
அதே என்னை எடுத்துவந்தேன்
எந்த என்னோ 
நீ விரும்பிக் கொண்டது
என நான் நினைத்துக் கொண்டது


****************************************************************
படம்: ராமலக்ஷ்மி ராஜன் 

செவ்வாய், நவம்பர் 21, 2017

வண்ணக் குழம்போடு திரியும் கடவுள்

எந்த இரண்டு புள்ளியில் பொறி உறங்குகிறது
எனத் தெரியாது 
மாற்றி மாற்றி உரசிக் கொண்டிருக்கிறோம்
நேசத்தின் இலைகளின்மேல் பனி மூடிக் கிடக்கிறது
பசிய ஒளி சுடராமல் இற்று விழுந்து விடுவோமோ
என்று நடுங்குகிறது கிளையோடு
காற்றோ தன்னிடம் வனம் உரையாடக் காத்திருப்பதாகப்
புறப்பட்டு வருகிறது
தப்பித் தப்பி நடக்கும் எல்லாவற்றுக்கும்
அமரத்துவம் பூசிவிட

வண்ணக் குழம்போடு
திரிகிறான் கடவுள்
அவனிடமிருந்து பிழைப்பதுதான் பெரும்பாடு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...