ஆடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

அதுவே இது

அன்றொருநாள் சோடியிடம் 
மூக்குரசி
கீச்கீச்செனக் கூவித்தாவி
கொண்டை கோதிய குருவிதானா இது 
தெரியவில்லை
அதனாலென்ன 
இதுவும் வேறெங்கோ 
வேறெப்போதோ 
வேறொன்றிடம் கொஞ்சியிருக்குந்தானே
அதுவே இது


****************************************************

பூச்சாடியென்று
நீங்கள் செருகிவைத்த மலர்க்கொத்தை
எடுத்து வீசிவிட்டு
அந்த பித்தளைசசருவம் 

தானே
அடுப்பிலேறிவிடும் என்று எதிர்பார்க்கவில்லைதானே
ஆனாலும் சமாளிக்கிறீர்கள் பாருங்கள்
ஒத்துகொள்ள வேண்டியதுதான் சாமி 

நீங்கள் நீங்கள்தானென

****************************************************************
குட்டைக்கரையோர நீரே போதுமாயிருக்கிறது
காய்ந்தபுல்லைக் கடித்து 

வாய் எரியும் ஆட்டுக்கு
ஆழமும் ஓட்டமும் உங்கள் கவலை


************************************************************


படம் ராமலக்ஷ்மி ராஜன் 

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

ஊர் வரைந்த மயில்

தன்மேல் எழுதப்படும் லிபி குறித்த 
விசனங்களோ கொந்தளிப்போ 
அடையாத தாளாகும் 
ஜென் நாளொன்றுக்கு காத்திருந்தேன்
இடையில்தான் எத்தனை யோசனைகள்
******************************************************************
ஆடு நகர்ந்துகொண்டேயிருக்கிறது
பச்சை படும்இடமெல்லாம்
கழுத்தில் கிட்டி மாட்டிவைக்காது 
என்ன வளர்ப்பு

********************************************************************
நீலம் ஒருவர்
பச்சை ஒருவர்
வட்டம் ஒருவர்
கோடு ஒருவர்
வரைந்து வரைந்து வந்திருக்கிறது 
நீங்கள் பார்க்கும் கோலமயில்
யார் அது என்பீர்கள்
யார்தானில்லை

*****************************************************************


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...