manasu giraamam pazhasu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
manasu giraamam pazhasu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஏப்ரல் 30, 2012

ரோஜா ரோஜாவல்ல....

ஏப்ரல் 30 திண்ணை இணைய இதழில் 



சந்தேகமும் எரிச்சலுமாய்ப்                         
  
பார்க்கிறான் பூச்செடி விற்பவன்…
மஞ்சள்,வெள்ளை,
சிவப்பு,மரூன்,ஆரஞ்சு ..
இன்னும் பெயர் சொல்லவியலா 
நிறச்சாயல்களில்
எதையும் தேர்ந்தெடுக்காது 
எதையோ தேடும் 
என்னை அவனுக்குப்
 பிடிக்கவில்லை…
“மூணுநாள் கூட வாடாது,…”
“கையகலம் பூ….”
அவன் அறிமுக இணைப்புகளைக்
கவனியாது ,
“நா கேட்டது ….லைட் ரோசுப்பா …
இவ்ளோ பெருசா பூக்காது…
மெல்லிசா…சட்டுன்னு உதிரும்…
அந்த வாசனையே இதுல இல்ல்லியே….”
வாரந்தோறும் 
நான் தரும் மறுப்புகளில் 
என் நினைவில் படிந்த
ரோஜாவைத் தேடிக்கொண்டே இருக்கிறான் 
அவன்……

புதன், மார்ச் 28, 2012

நிழல் தேடவில்லை


புதிய மாடிப்படி .... 
                                                   
க்ரோட்டன்சின்  எதிரி! 
தொட்டி துறந்து 
வேர்பிடித்தபின் 
இளவெயிலும் படராத்தடுப்பாய் 
அது முளைத்தது !
இயலாமையோடு 
இடித்தபடி குரோட்டன்ஸ் 
அந்தப்பக்கத்தில் நிற்கும் 
வாழை ,முருங்கையிடம் 
விசாரித்தது
விதையா,பதியமா
எப்படி வளர்ந்தது மாடிப்படி என்று?

வியாழன், ஜனவரி 26, 2012

நினைவின் சரத்தில்

அந்த மனோரஞ்சிதம் 
வருடங்கள் கடந்தும்  
வாடாமல் சிரிக்கிறது !
பிரத்யேக மணமும் 
பெயரற்ற நிறமும் கூட 
மங்குவதேயில்லை...
வெல்வெட் துணியிலிட்ட 
முத்துமாலைகூட
சற்றே 
பழுத்த வெண்மையில் ...
ஆனால் 
என் ஒற்றை மனோரஞ்சிதம் 
முணுமுணுத்த பாடல் வரிகளையும் 
வெளுத்த கனவுகளையும் 
இதழ்களாய் இணைத்தபடி 
வாடாமல்....  

திங்கள், ஜனவரி 16, 2012

ஆற்றின் மேல் ஒரு சமாதி (பழைய பாலம்)

இப்படித்தான் 
என்னோடும் 
உறவாடிக் கொண்டிருந்தார்கள் 
கைப்பிடியோரம் 
சைக்கிள் சாய்த்து வைத்து 
கதையளக்கும் நிரந்தரக் கூட்டம் 
சரசரவென 
விரையும்  வாகனவரிசை 
சமயங்களில் 
வழிவிடாச் சண்டை 
மோதி மோதிக் 
கடந்து போகும் காற்று .....
*************************************
எல்லாம்
 ஒரு சந்தேகத்தில் 
முடிந்து விட்டது !
வலுவில்லை எனக்கென 
வந்தது புதிய பாலம் !
காற்றும் குப்பையும் 
மட்டும் 
கடந்துபோகக்  கிடக்கிறேன்  
பக்கத்து பரபரப்பின் 
பார்வையாளனாக ......

புதன், ஜனவரி 11, 2012

ஏறமுடியாத கோபுரம்


திருக்கோட்டியூர் ராமானுஜனை
 
நினைக்கும்தோறும்
செவ்வாய்ப்பிள்ளையார்
ஔவை படுத்துகிறாள்..!
பரவாயில்லை....
அவர் பகிர்ந்தது
மறுமையற்ற வீடு! 
இதில்
அச்சமூட்டுகிறது
வெறுமையாகும் வீடு!

புதன், ஜனவரி 04, 2012

பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்


 
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர் 
நிழல் பெற?
************************
வயலைவிற்று 
வாழ்வு பெற்று 
பானைபிடிக்கப் போன 
பாக்யலக்ஷ்மிக்குப் 
பல கேள்விகள் ..... 
  

செவ்வாய், டிசம்பர் 27, 2011

எங்கேந்த அதெல்லாம்...?

பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
காயும்வரை 
பின்னல் பிரிக்காது 
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும் 
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும் 
ஈருளியில் எரிச்சலாகி 
பேன்குத்தும் தாலாட்டில் 
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும் 
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
 புரியாது விழிக்கிறாள்
இந்நாளின் எழிலரசி      

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...