குமுதம் சிநேகிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குமுதம் சிநேகிதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 20, 2018

கனம்தாங்காக் காற்று


அடுத்த உடுத்தலுக்குமுன்
இந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக 
ஏதோ ஒரு பிடிமானத்தைப்
பற்றிக்கொண்டு
காயும் பழஞ்சீலை
கரைந்த சாயத்தையும்
காணாமற்போன கோடுகளையும் 
வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது
முறையிடலின்
கனம்தாங்காக் காற்று 
உய் உய்யென ஓடிவந்து 
பரிவாகத்தடவிப்போகிறது

மழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை
பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை
சுகம் என்பதும் என் சொல்லே
களத்துமேட்டிலும்
கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து
நைந்த
முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் 
வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு
கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல

செவ்வாய், அக்டோபர் 04, 2016

சிநேகிதி -யில்

பத்துகாசு பொட்டுக்கடலையோடு
பசியடக்கி
ஏதோ படித்து ஏதோ வளர்ந்து
வாக்கப்பட நின்னபோது
வரலட்சுமி நெனச்சதே இல்ல 
மூணு பவுன் போட முடியாம
சாராயக்கடை
முத்து மாமா வீட்டுக்கே
மருமகளாவோமுன்னு

மாமியார் வீட்டுல பொட்டுக்கடலைய
உடைச்ச கடலைன்னு சொல்றதையே
ஆச்சர்யமா சொல்லிகிட்டிருந்த
வரலட்சுமி
இப்போவெல்லாம் அலுப்பா சொல்றா
அஞ்சாவது கார் பத்தி
லட்ச ரூவா நாயப்பத்தி
நவரத்தின ஆரம் பத்தி
உடைச்ச கடலையும் பொட்டுக்கடலையும்
ஒண்ணுதான்னு சொல்லித்தந்த
கமலா ஆச்சர்யமாவே கேட்டுக்கிட்டுருக்கா
*************************************நன்றி.குமுதம் சிநேகிதி இதழ்


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...