அழுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அழுக்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 09, 2016

அழுத்திதேய்த்த போது(காது)

அவள் காதுகளைத் தேய்த்துக்குளித்து நாளாயிற்று 
என திடீரெனத் தோன்றியது
அழுத்தி அழுத்தி
தேய்க்க முற்பட்டபோது
குளியல் வேளைகளில்
மனதில் பதிந்திருந்த 
அடுப்பிலேற்றிய குக்கரின்
அழுத்தம்
முடிக்காது கிடக்கும்
பிள்ளையின் வீட்டுப்பாடம்
முறைத்தபடி வெளியேறிய
கணவன் தள்ளாடி வருவானோ என்ற பதட்டம்
இன்னும் இன்னுமான
அழுக்குகளின் அவசரத்தில்
காது கழுவ மறந்தே போனது நினைவில் வந்தது
இன்று தேய்த்துவிடலாம் என்று அழுத்தி இழுத்ததில்
காது நீளும் எனத்
தெரியவில்லை
நீண்ட காது கேட்பதோடு
நில்லாமல்
பேசவும் செய்கிறது.
அதுவும்
எதிர்த்துப்பேச வேண்டாமென வாய்க்கு
சொல்லித்தந்ததெல்லாம்
புரியாமல் பேசுகிறது
மௌனியாய் இருக்க
மனதிற்கு இட்ட கட்டளைகளை உடைத்துப்
பேசுகிறது
வாயாடி "யாக இல்லாதவளின் காது
கர்ஜிப்பதைத்தாங்க இயலாமல் முதலில்
வீடு காது பொத்திக்கொண்டது.
பின்னர் ஊர்.
விசாரித்த போது காது தேய்த்த கதை தெரியவந்ததால்
காது தேய்க்காது அழகியாக மாற 
விளம்பரப்படங்கள் உருவாகின்றன
ஒரு காது வளர்ந்ததுபோதும்
அவள் அவர்களாவது
ஆபத்து என்ற எச்சரிக்கையோடு

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

செவ்வாய், டிசம்பர் 10, 2013

எங்கே நீயோ

வல்லமையில் நேற்று...
                         9 12 13http://www.vallamai.com/

--பிரியம் சொல்லில் தளும்பல்
உன் ப்ரியம்
கருணை கண்ணில் வழிவது 
பார்வைக்கு அழகு 
பார்ப்பவர்க்கு அழகா ..?
என் ஆன்மாவை 
துடைத்துத் தூபம் காட்டி 
இறுகப் பூட்டிவிட்டேன் 
புற அழுக்கு குறித்த அச்சமென்றாய் ..

அழுக்கு தின்று மூச்சு விடும் 
மீன் அது என்பதை அறியாயோ 
அகவிழி திறந்து ஆன்மாவை 
உலவவிடு... 
தடாகம் முழுக்க துள்ளிப் புரண்டு 
நீந்தும்போதில் 
நீயும் கற்பாய் பிரியமும் கருணையும் 
விரல் வழியும் வழியும் என்பதை...
  

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...