விதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 27, 2021

கைகளைக் கழுவ விடுங்கள்

 

நீங்கள் உணவளிக்கப் பிறந்தவர்கள்
நாங்கள் கைகழுவப் பிறந்தவர்கள்
அவுரி கண்ட மண்ணுக்கு
ஆண்டுக்கணக்கில் விதையெதற்கு
உரமும் நீரும் ஊக்கத்தொகையும் உங்கள் கவலையாகாது
நகரும் கால்களில்
உங்களுடையது
நான்காமிடமோ
நாற்பதாமிடமோ
உடைமை என்பதே பெருஞ்சுமை
அதை இறக்கத்தானே
இத்தனை பாடு
*********"*
நைச்சிய சொற்களின்
அடையாளம்
நாளும் களைபறித்த
கண்களறியாதா
கொழுமுனை கீறிய நிலத்துக்குள்
புதையட்டும்
பொய்ம்மையின் பசப்பல்
வரலாறு
எல்லாவற்றையும் பிடுங்கிப்பிடுங்கி
உருட்டி உருட்டி
நாலாய் எட்டாய் மடித்து விழுங்க
எங்கள் வாழ்வென்ன
உங்கள் அம்மைசுட்ட ரொட்டியா
விழுங்கும்வேகத்தில்
ஒரு விக்கல் வந்தாவது
நினைவூட்டாதா
தொண்டைக்குக்கீழே
எல்லாம் ஒன்று
எல்லார்க்கும் ஒன்று என்று
பக்கத்திலிருக்கும்
முதலாளிமார்க்கும்
தங்கத்தில் வேகவில்லை
தானியத்தில்தான் வேகிறது
எங்களுடையது
கஞ்சி
உங்களது
பாரிட்ஜ்
உண்டு கழுவ விரும்பும் கைகளையுடைய நாங்கள்
உதறிக்
கைகழுவும் உங்களிடம்
இரத்தல் தகுமோ

புதன், செப்டம்பர் 30, 2020

விரல்நுனிப்பூ

     கொஞ்சம்போல் தண்ணீர்சிந்தியது

மேசையைத் துடைக்கலாம்தான்
துணி எடுத்துவரவேண்டும்
சற்று யோசித்து
விரல்களால் தண்ணீரை இழுத்துவிட்டேன் ஏதோ ஒரு பூ மாதிரி
கிடந்தது
கூடக்கொஞ்சநேரம் ******************************************


யாரோ விதையிட
யாரோ நீரூற்ற
யாரோ ஆடுமாடுவிரட்ட
உன் கவலையெல்லாம்
குப்பை பற்றி


*********************************


உனக்குப் புரியும்
எனக் காத்திருக்கிறேன்
உன்னைத்தவிர
எல்லோரும்
ஆறுதல் சொல்லுமளவு புரிந்து கொண்டாயிற்று **************************************

யாரோ விதையிட
யாரோ நீரூற்ற
யாரோ ஆடுமாடுவிரட்ட
உன் கவலையெல்லாம்
குப்உனக்குப் புரியும்
எனக் காத்திருக்கிறேன்
உன்னைத்தவிர
எல்லோரும்
ஆறுதல் சொல்லுமளவு புரிந்து கொண்டாயிற்றுபை பற்றி

ஞாயிறு, அக்டோபர் 16, 2016

தவிப்பின் தொடர்ச்சி

பேசாதிருப்பது ஒரு தவிப்பு 
இல்லை 
தவிர்ப்பு என்று யாருக்கு சொல்ல 
விதை அடுத்த செடிக்கான 
தொடக்கம் என்றே பார்த்திருக்கிறேன்
இந்த செடியின் 
தப்பித்தல் என்கிறாய்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...