velichcham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
velichcham லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஏப்ரல் 25, 2012

கனவின் சிறகுகள்



ஏப்ரல்22 கீற்று இணையத்தில் வெளியானது
நிலவின் கீற்றும் 
குளத்தின் சுவாசமும் 
மரங்களின் மௌனமும் 
புதர்களின் சிலிர்ப்பும் 

அவள் 
பின்னிய கரங்களின் 
விடுவிப்புக்காகவோ, 
சிறகுகளின் 
வீழ்ச்சிக்காகவோ...
காத்திருக்கின்றன.
ஒவ்வொன்றாக 
அல்ல ஒட்டுமொத்தமாக 
அகற்றப்படுகையில் 
அவள் 
வெள்ளுடை நனையாது 
சற்றே தூக்கி 
நீரின்மேல் 
நடந்து ...வனம் சேர்வாள்.

சனி, ஏப்ரல் 21, 2012

ஒளியின் வீடுகள்

வெளிச்சத்தைவிட
விளக்குகள்
மதிப்பாகிவிடுகின்றன
வெளிச்சம்
விளக்குவழிதான்                                                                    
வரமுடியும் என்றானபோது....
****************************
விளக்குகளை
உருவாக்குகிறவர்கள்
வெளிச்சத்தை
உருவாக்கிட முடிவதில்லை..
****************************
நேற்றிருந்த வெளிச்சம்
விளக்கினுள்
திரும்பாவிடினும்
புதிய வெளிச்சத்தைக்
கூட்டிவரும்
தோழமையுடன்
இருளை வரவேற்கின்றன
விளக்குகள்.
***************************
பழைய விளக்கு
புதிய வெளிச்சம்.

வியாழன், மார்ச் 15, 2012

நஞ்சாகும் அமுது

சோப்பு விற்க
(எல்லாம் திறந்திருந்தால்)
முப்பது வீடாவது
ஏறி இறங்க வேண்டும்.....!

தள்ளுவண்டி காயின்
பசுமை வாட
தராசுக்கு வேலையில்லை..
தெருமுனை உணவக
தள்ளுபடிவிலையே மிஞ்சும் !

மூட்டை இறக்க வாகாக
அந்திவரை நிற்காது
வந்த வாகனம் ...!

தலைக்கவசத்துக்குள்ளும்
பேருந்து நெரிசலிலும்
பெருகும் ஆறு
உதிர்க்கும் சொல்லில் எல்லாம்
லாவா தெறிக்கிறது ...!

இங்கேயே
கிடந்து இறைபடும்
சூரியனே
எட்டப்போ கொஞ்சம்...
பிரபஞ்சம் பெரிதாமே....? 

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...