சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சோறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜூன் 12, 2019

கெட்டித்துப் போன தூரிகை

ஒழுங்குபட்ட வண்ணத்தீற்றல்கள் இல்லை
திடீரென எகிறும் ஆரஞ்சுக்கு அருகே 
கடல்நீலம் நெளிநெளியாக நீள
சாய்வளையங்கள் பச்சையில்
எதற்கென்றே தெரியாது 
குறுக்குமறுக்கில் பிரௌன் கோடுகள்
தலைகீழாக வழிகிறது பொன்மஞ்சள்
ஒவ்வொன்றாகப் பொருள் கேட்காதே
சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்
அதுதான் நான்

******************************************************
வீட்டின் நீள அகலத்துக்குத் தக்க 
திரையில் தீட்ட முடிவதில்லை வாழ்வை
விதிமுறைகளின்படி
சுற்றிலும் இடம்விட்டேன்
மனச்சித்திரத்துக்கேற்ற வண்ணம் 

தோய்த்த தூரிகையைக் கையில் வைத்தபடி
யாருக்கோ பதில் சொல்லித் 

திரும்புவதற்குள் உலர்ந்துவிடுகிறது
கெட்டித்துப்போய்விட்ட தூரிகை 

உதறுவதற்குள் நல்லவேளை
எரிவாயு பதிவுசெய்ய வேண்டுவது 

நினைவுக்கு வந்துவிட்டது
சோறு முக்கியம் சார்





சனி, அக்டோபர் 24, 2015

பாடல் பெறா வாழ்வு


என்ன பொறுக்குதென்றே
தெரியாத குருவிகள்,
எப்போதாவது வரும் புறாக்கள் 
எங்கிருக்கிறதென்றே இருப்பிடம் காட்டாது
அன்றாடம் தன் குரலால் இழுக்கும்
ஒற்றைக்குயில்
கேலி செய்வதுபோல் திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே தாவும் அணில்
எல்லாவற்றையும் பற்றி
எழுதியாயிற்று
அன்றாடம் ஒரு கவளம் சோற்றுக்கு
வருவது ஒரே காக்கையா என
ஏனோ நினைத்ததில்லை
நான் நினைத்தேனா
என அதுவும் நினைக்கவில்லை
எங்கள் பந்தம் ஒரு கவளம்
அதற்கு மேல் ஏதுமில்லை


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...