ஓடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓடம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், ஜூலை 10, 2017

நிலா நதி ரசீது

கரையோரம் 
காத்திருந்த போதெல்லாம்
கையிலிருக்கும் துடுப்பு
ஓடமேறும்போது
தவறிவிடுகிறது


****************************************
நிலா 
நடந்துகொண்டிருக்கிறது
கரையோர மரங்களூடே
நதியில் 

முகம்பார்க்கவியலாத போதும்
*************************************************

எந்த குற்றவுணர்ச்சி வழிந்தாலும்
ரசீதுகளால் துடைத்துக்கொள்ள முடிகிறது
பாக்யம் பாக்யம்

*************************************************************
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை
பொய்,புரட்டு,ஏமாற்று
வஞ்சகம்,சூது,கொலை..
.....
...திரும்பத் திரும்ப தெரியாமல்
எழுதிவிட்டேனா எனப் பார்க்கிறீர்கள்
நூறு வரி கடந்து
வேண்டுமானால் ஒருமுறை
எழுதிவிடுகிறேன்
விசாரணை,வழக்கு,கைது
பிணை....வருடங்கள்.....

********************************************************






வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பொருளறியாமல் .....




அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...