வானவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வானவில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 18, 2016

தூண்கள் இல்லாத வீடு

சிலநேரம் வானவில்லுக்காகக் 
காத்துக்கொண்டிருக்கிறோம் 
எப்போதோ பார்த்தது 
பிள்ளைக்குக் காட்டலாமே என்று
மேகமே திரளாவிடில் என் செய்ய

****************************************************************
எவ்வளவோ இலைகள் உதிர்ந்துவிட்டன
இந்த உலகம் தோன்றிய அல்லது 
இலைகள் தோன்றிய நாளிலிருந்து
ஆனாலும்
இதோ இக்கணத்திலும் 
துளிர்த்துக்கொண்டிருப்பதை
நீங்கள் நம்பிக்கை என்கிறீர்கள்
அவர்கள் அறியாமை என்கிறார்கள்
நான் இயற்கை என்கிறேன்
அந்த துளிர் எதுவுமே சொல்வதில்லை


******************************************************************
திரும்பத்திரும்ப சொல்லப்படும் 
விளக்கம் அலுப்பூட்டுகிறது
திரும்பத்திரும்ப கேட்கப்படும்
கேள்வி பதிலை இழக்கிறது
திரும்பத்திரும்ப நடக்கும்
நிகழ்வில் கவர்ச்சி தேய்கிறது
திரும்பத்திரும்ப பகிரும்
செய்தியின் நிறம் மாறுகிறது
அதனாலென்ன
திரும்பத்திரும்ப எல்லாம்
நடக்கத்தான் செய்கிறது


*************************************************************************
சொன்னால் போதும்என்ற 
அழுத்தம் நெருக்கும்போதெல்லாம் 
யாரிடமாவது சொல்லித்தீர்க்கிறீர்கள்
அந்த சொற்களுக்குப் புரிவதேயில்லை
அவற்றை நீங்கள் 

மாத்திரைகளின் அந்தஸ்தில் வைத்திருப்பது
சொல்லிக்கொள்ளவே 

வைக்கப்பட்ட தூண்களும் இல்லாத வீட்டில்
வசிக்கும் காலத்தில் என்னதான் செய்வீர்கள்.


**************************************************************************


திங்கள், ஏப்ரல் 04, 2016

ஏப்ரல் பூ -3

திடீரென பார்வைக்கு வந்து சேரும் சிலுவை
தள்ளிவைத்த கனத்தையெல்லாம்
ஆணியிட்டு இறக்குகிறது
*************************************************************
வலியை மறப்பதா
மறைப்பதா துறப்பதா
தூக்கி எறிவதா
ருசிக்கப்பழகுவதா .
ஒவ்வொரு கேள்விக்கும்
தாளம் போடுவது போல்
ஆடிக்கொண்டிருக்கும்
நெகிழிப்பையை எடுத்தெறிய வேண்டும் முதலில்
*********************************************************
நிர்தாட்சண்யத்தை
சாதனை போல
சொல்லிக்கொள்ளும்
தருணத்துக்கான
அழிப்பான்
எங்கு விற்கப்படுகிறது
***********************************************************
அழுத்தமான நிறங்களை
மட்டுமே கடைவிரிப்பதால்
வானவில்லையே
ரசிப்பதில்லை
என்ற உன் பெருமிதத்தின்
பொருள்
மழுப்பல்களின் வழிபாடா
அந்தப்பெருமிதத்தில்
இடி விழ....

வெள்ளி, பிப்ரவரி 07, 2014

அடையாளம்


அன்பைக் கண்டுகொள்ள
ஆவல் கொண்டேன்
என்னை நான் பார்க்கும் தருணம்
தெரியுமென்றாய் …….
சலனம் துடைக்க
பொதியில் அடைந்த உயர்காகிதச்சுருள்
உதவாது என உணரும்போது
அது பெருகித் தளும்பி
வழிந்து கொண்டிருந்தது…

ஒளிக்கீற்றைத் தொடர்ந்து
நடந்து கொண்டே இருக்கிறேன்
வெளிச்சம் எக்கணமும்
என்னுள்
நிரம்பிவிடலாம் என்று.

இளைப்பாறல் உறக்கம் அல்ல
உறக்கம் இளைப்பாறல் அல்ல
என்கிறாய்.
என் பாதங்களைப் போலவே
முன்பின்னாக மாற்றிப் போட்டுக் கொண்டே
போகிறது வானம்…

வானவில் பார்க்கலாம் என்றவன்
பாலை தாண்டி எப்போது வருவானோ…
நானோ மழைவானத்தின்
அடிவாரத்தில் நின்றும்
அவன் திசைப் பார்வையோடு.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

வண்ணம் வளர்ப்பேன்




ஒரு சோப்புக்குமிழுக்குள்ள 

உரிமையாவது வேண்டாமா....?



உன் கற்பித  நிறங்களைக்
கவிழ்த்துக் குழப்பித்
தீற்றி
த்தடவி
என் வானவில்லை
வரையாதே ..


ஏழு நிறங்களுக்கும்
இடம் வேண்டுமே
என்பது  உன் பொய்க்கவலை.


இரண்டே நிறக் கீறலையும்
வானவில்லாக
வளர்த்துக் கொள்வேன்..
விலகிப்போ...உன் குழம்புக் குவளைகளோடு..!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...