காக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காக்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

ஒன்றரை காக்கை

 நூறு டிகிரி மட்டும் தெரியும் வானத்தில் இரண்டு காகங்கள் இல்லை ஒன்றரை

இந்த சன்னலுக்கு
விளிம்புமில்லை
அந்த நூறு டிகிரியில்
ஒரு கவளத்தை இட
இல்லை
வீசக்கூட
மண்ணுமில்லை
தளமுமில்லை
ஆனாலும்
ஒன்றரை காக்கைகள்
என்னைப் பார்த்துப் போகின்றன தினமும்

செவ்வாய், ஜூன் 11, 2019

எறும்பின் தடம்

ஒரு பூவைக்கூடக் காணோம் 
இந்தக்கிளையில்
வெயில்படா உள்ளிருப்பில்
 கசப்பின் ருசியறியாதோ

*****************************************************
புள்ளிபுள்ளியாய்ப் பூத்துக்கிடக்குது
 பருக்கைசுமந்த
எறும்பின் தடம் 
தரையெங்கும் 
தனக்கு வைத்ததில் 
காக்கை விட்டு வைத்தது சுமந்து
புண்ணிய கணக்கு அதற்குமுண்டோ

*****************************************************
எவ்வளவு முறை அழுதாலும் 
கண்ணீர் அதேகறையாகத்தான் படிகிறது
ஆனாலும் சொல்லத்தான் வேண்டும்
 இப்போதெல்லாம் அப்படியில்லை என்று
அழுந்தத் துடைத்துவிட்டு

*********************************************************
விசுக்கெனக் கடப்பவர்களைப் 
பார்க்கவே கூடாது
அவர்கள் பாட்டுக்கு
இனி பார்க்கவே முடியாதவர்களின் 
ஜாடையை 
பாவத்தை
நினைவூட்டிக் கடந்து விடுகிறார்கள்
*******************************************************************

திங்கள், டிசம்பர் 04, 2017

தழையுணர்த்தும் சிறுவாழ்வு

உலுக்கி உலுக்கி ஆட்டியபோதும்
முருங்கைக்கிளை 
சிரித்துக்கொண்டு நிமிர்ந்துவிடுகிறது
பெருமழைசொரிந்த
நேற்றைய சலிப்பெங்கே என்றால்
நம் காலடியில் உதிர்ந்து பறக்கும்
இலைகளைச் சுட்டியபடி
ஓராயிரமாய்க் கிழிந்து தொங்கும் 
வாழையிலையை வருடப்போகிறது

ஏறியிறங்கும் அணிலுக்கும் 
ஒண்டு இடுக்கில் நார் சேர்க்கும் காக்கைக்கும் 
ஆட்சேபமின்றி இடம்

மழையைக்குடிக்கும்
ஒளியைத்தின்னும்
இளவெயிலில் தழையுணர்த்தும்
சிறுவாழ்வு
சொல்லிக்கொள்கிறோம்
எதற்கும் இடந்தரா எம்முடையதைப் 
பெருவாழ்வென்று


திங்கள், ஜூலை 10, 2017

கொலைவாளினை எடடா

தலைகுப்புற விழுந்தவனைப் பார்த்து 
உச்சு கொட்டுகிறீர்கள்
அந்த தலையே காலென்று 

கண்டுபிடிக்கப்படும் நாளுக்காக
அவன் காத்திருக்கிறான்


***************************************************
உங்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள்
ஐயோ பாவம்
என்னென்னவோ படுபாடு படுகிறீர்கள்
அட டா
காக்காய் குருவிக்காக 
தண்ணீர் வற்றிப்போன 
நீர்த்தடம் பார்த்து கூட அழுகிறீர்களாம்
சற்றே காத்திருங்கள்
இதோ வந்துவிடுவார் தலைவர்
இப்போது என்ன செய்கிறாரா
அதிகப்பிரசங்கியாக இருப்பதுதான்
 உங்கள்
முதல் பிரச்சினை
போய் வாருங்கள்
பக்குவப்பட்ட பின் வந்து சந்திக்கலாம்
*************************************************************

இவ்வளவுதானே
என்பதே
கொலைவாளாகி விடக்கூடும்
அவ்வளவுதான்

*********************************************

சனி, அக்டோபர் 24, 2015

பாடல் பெறா வாழ்வு


என்ன பொறுக்குதென்றே
தெரியாத குருவிகள்,
எப்போதாவது வரும் புறாக்கள் 
எங்கிருக்கிறதென்றே இருப்பிடம் காட்டாது
அன்றாடம் தன் குரலால் இழுக்கும்
ஒற்றைக்குயில்
கேலி செய்வதுபோல் திரும்பித் திரும்பிப்
பார்த்துக்கொண்டே தாவும் அணில்
எல்லாவற்றையும் பற்றி
எழுதியாயிற்று
அன்றாடம் ஒரு கவளம் சோற்றுக்கு
வருவது ஒரே காக்கையா என
ஏனோ நினைத்ததில்லை
நான் நினைத்தேனா
என அதுவும் நினைக்கவில்லை
எங்கள் பந்தம் ஒரு கவளம்
அதற்கு மேல் ஏதுமில்லை


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...