பிடிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிடிமானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், டிசம்பர் 09, 2021

புள்ளியின்மேல் ஏறிய நாள்

 யாருக்குத் தேவையாக இருக்கிறது

நீ கடந்து வந்தது

ஆனாலும்
தூணைப்பிடித்துக்கொண்டு
சாய்ந்தாடிய பாவத்திலேயே
பற்றிக்கொண்டிருக்கிறேன்
இன்னொருகை
ஏதாவது பிடிமானம் கிடைக்காதா
என்று அலைகிறது.
போகிறபோக்கில் என்றோ ஒருமுறை
யாரோ சொல்லிவிட்ட
ஒற்றைக்கையால் சமாளிப்பதைப்பார்
என்ற விதந்தோதலை மெய்ப்பிக்கவே
ஆயுள் கழிகிறது
ஒரு கணத்தின்மேல்
இருபத்துநான்குமணி
நேரத்தையும் ஏற்றி வைப்பதேன்

செவ்வாய், ஏப்ரல் 20, 2021

சம்பிரதாய சந்தோஷங்கள்

 எப்போதும் உண்டுதானே சில சம்பிரதாயங்கள்

எதைச் சொன்னாலும்
சரிதான்... ஆனாலும்
என்றொரு பிடிமானத்தைப் போட்டு வைப்பது
எல்லோரும் அடுத்த சொல்லுக்காக முகம் பார்த்திருக்கையில்
நிதானமாக நீர்பருகி
தொண்டை செருமி
தொடர்பற்று தொடர்வது
உள்ளதைச் சொல்லப் போவதில்லை என்றாலும்
என்னைப்பற்றி
என்ன நினைக்கிறாய் எனக் கேட்பது...
சரி
சம்பிரதாயத்தை
நாம் முறிப்பானேன்

வியாழன், ஜூலை 04, 2019

பொன்துகள் உதிர்க்கும்

இருளைப் பொருட்படுத்தாத
சரக்கொன்றை 
தானே வெளிச்சமென 
அறிவித்துக்கொள்கிறது
ஆருடங்களின் கருணையிலாச்சொற்கள்
 கேட்டும் கலங்காது
அலட்சிய உதட்டுச்சுழிப்பாக 
நான்கு பூ உதிர்க்கிறது
பிடிமானம் பிடிமானம் 

என அலைவுறும் தொட்டிமுல்லைக்கு
நான் காட்டும் நிலாவுமாக நிற்கிறது
இழப்பைச் சுட்டுகிறாயா
துளிர்ப்பைச் சொல்கிறாயா
என்ற கேள்விக்கும்

 அசைந்து 
இரண்டு பொன்துகள் உதிர்க்கும் புத்தமரம்

வியாழன், டிசம்பர் 20, 2018

கனம்தாங்காக் காற்று


அடுத்த உடுத்தலுக்குமுன்
இந்தக்கோடியிலும் அந்தக்கோடியிலுமாக 
ஏதோ ஒரு பிடிமானத்தைப்
பற்றிக்கொண்டு
காயும் பழஞ்சீலை
கரைந்த சாயத்தையும்
காணாமற்போன கோடுகளையும் 
வெயிலிடம் பீற்றிக்கொண்டிருக்கிறது
முறையிடலின்
கனம்தாங்காக் காற்று 
உய் உய்யென ஓடிவந்து 
பரிவாகத்தடவிப்போகிறது

மழைத்தாரையின் கீழ் சுகமாக நிற்கிறது பாறை
பிரியம் என்றுமில்லை பேதமை என்றுமில்லை
சுகம் என்பதும் என் சொல்லே
களத்துமேட்டிலும்
கரிபிடித்த அடுப்பங்கரையிலும் கரைந்து கரைந்து
நைந்த
முந்தானை ஒன்றே காசு முடிச்சுக்கும் 
வியர்வை துடைக்கவுமாகக் கொண்டு
கூடை சுமக்கும் தெய்வானை ஆச்சியைப்போல

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...