வன்கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வன்கொடுமை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, நவம்பர் 03, 2018

ராஜலட்சுமியைப் பார்த்தவள்


என்னால் சொல்ல முடியாது
சற்றுமுன்கூட பதற்றமானது

ஒளிபொங்கும் பாதையின்
சிறுகிளைச்சந்தில் தனித்து நடந்த 
சீருடைச்சுடிதார் சிறுமகள் பின்னால் 
நடந்து போன என் மனமே 
திரும்பாதபோது எப்படிச்சொல்வேன்

விற்பனைப்பணி முடித்து பேரங்காடி வாசலில் 
பேருந்துக்காக நிற்கும் ஒடிசல்பெண்ணின் 
சேலைக்கறை பார்த்தே கசங்கிவிட்ட
என்மனதால் எப்படி இயலும்
கொத்தாய் விழுந்த தலை 
கொண்டவளைப் பற்றி எழுத

வெஞ்சினங்கொள்ள
வெறிகொண்டு தாக்க
வெட்டித்தறிக்க
நூறாயிரங்காரணமுள்ள ஊரில்
ஒற்றைச்சிறுமி மேல் அத்தனையும் இறக்கிய 
இழிமகன் மேல் துப்ப
அடிவயிற்றிலிருந்து ஆங்காரம் தேக்கி 
எச்சில் கூட்டலாம்
எரிதழல் வீசலாம்
எழுதவும் கூடுமோ

சொட்டிய ரத்தம் பார்த்து
உறைந்த உடல்
உதறுகின்றது
சாதியா மதமா இனமா
பணமா
என்ன சனியனாகவும் இருக்கட்டும்
அவன் வீச்சரிவாளில் ஒட்டிக்கொண்டிருந்த அதை எப்படிக் கழுவப்போகிறீர்கள்
எட்டூர் வீச்சம் இன்னும் உங்கள் நாசி துளைக்கவில்லையா

செவ்வாய், மார்ச் 31, 2015

கவிழ்ந்திருக்கும்…


பார்த்த கணத்திலிருந்து 
என் அடிவயிற்றைப் பிசைகிறது
அந்தப்படம்
அழுது வடியும்
விளக்குக் கம்பம் ஒன்றின்கீழ்
தலைகவிழ்ந்து
அமர்ந்திருக்கிறாள் அச்சிறுமி
பசியில் குறுகியோ
சீண்டலில் சாம்பியோ
தனிமையில் வெம்பியோ
அங்கே அமர்ந்திருப்பதாக
விளக்கம் தராதீர்கள்
தயவு செய்து
உங்கள் படத்தை
சற்றே திருத்துங்கள்
அந்த விளக்குக் கம்பத்திற்கு
சற்றுத் தள்ளி
அரையிருளில்
பாத்திரம் தேய்க்கும் ஒரு அம்மா
இல்லை
நீர் சுமக்கும் அக்கா
வெறுமையாய்ப் பார்க்கும் அப்பா
பண்டம் கவர்ந்த தம்பி
அட
எதுவும் வேண்டாம்
ஒரு சோகைப் பூனையோ,நாயோ
கூடப்போதும்
கோபத்திலோ பிடிவாதத்திலோ
கவிழ்ந்த அவள் தலை
எல்லாம் மறந்து
புன்னகையுடன் நிமிரும் காட்சியை
நானே கற்பனை செய்து உறங்கிவிடுவேன்    -மார்ச் 27 20015 வல்லமை 

வெள்ளி, ஜூன் 13, 2014

நெஞ்சு இரண்டாக


ஆடை குலைக்கும் கைகள்
அப்படியே துண்டாக,
நெறிகெட்ட நினைப்பு வந்த
நெஞ்சு இரண்டாக,
தொட்டதும் தலைவெடிக்க,
தொடருமுன்
தொடைகிழிக்க
அவளுக்குப் பலம் தரவோ
அடுக்காக வரம் தரவோ
ஆரு சாமி இருக்கீங்க ..

குழந்தைப் பருவத்திலேயே
குறுவாள் கொடுத்திடவா...
தவழும்போதே
தற்காப்புக் கலை சொல்லவா..

பேன்,சிரங்கு பெருமையோட
பழஞ்சட்டை வாசத்தோட
காயும் வயித்தோட
கண்ட வழியோடும்
வறுமைக்குப் பொறந்த மக்கா
இத்தனையும் தாண்டி இத்துப்போன உன் உடம்பு
என்ன தருமுன்னு வந்தான்
வந்தவழி மறந்த நாயி...
 —

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...