மோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

விடை பெற்றவர்

முன்னதாக விடைபெற்றுவிட்டவர்களுக்கு
வேறு வேலையே இல்லை போல
யார் எதைப்பற்றிப் பேசினாலும்
எங்கு எது நடந்தாலும்
நெஞ்சோரம்
வந்து நின்றுவிட வேண்டியது
இப்படித்தான் ஒருநாள்
என்று நினைவுச்சக்கரத்தைச்
சுழற்ற வேண்டியது...
திடீரென்று 

யாருடைய செல்லப்பூனையோ நாயோ
நம் காலை நக்கிவிடுவதான 

திடுக்கிடல்
ஒவ்வொரு முறையும்


செவ்வாய், ஜூன் 11, 2019

என்னிஷ்டம்

மௌனமாக இருப்பதிலிருந்து தப்பிக்க
எதையாவது பேசி
உன்னைப்பற்றிய பேச்சாக மாறுவதிலிருந்து 
தப்பிக்க
மௌனத்துக்கு மீண்டு
இம்முறை மௌனத்தின் 
சுருக்கிலிருந்து தப்பிக்க
பாடலைச் சரணடைந்து
நினைவுகளைக் 
கடைவாயிலிட்டு அரைக்கும் பாடலோ 
பல்லிளிக்கிறது
நாலு எட்டு வைத்து 
மூச்சிரைக்க 
படங்களின் நிழலுக்குள் புகுந்தேன்
சும்மா சும்மா இதென்ன
படத்தில் அமர்ந்தபடி சலிக்கிறாய்
என்ன செய்யப்போகிறாய் படங்களை வைத்து....
அடப்போப்பா
போனது உன்னிஷ்டம்
நினைப்பது என்னிஷ்டம்

புதன், மார்ச் 20, 2019

அப்பா இல்லாத வாழ்க்கை

அப்பா இல்லாத தீபாவளி
அப்பா இல்லாத புத்தாண்டு
அப்பா இல்லாத பொங்கல் இப்படித்தான் 
ஒவ்வொன்றாக வருகிறது
அப்பா என்று மகன்களைக் குறிப்பிட்டு 
எனக்கான விளியும் இல்லாமல் போனாய்
இல்லாமல் போன உன்னைவிட்டு
 இருக்கின்ற நாட்களைத்தான் 
பற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது
ஆறாய்ப்பெருகிய கண்ணீரும்
அதிர்ந்தெழும்பிய விம்மல்களும்
அடக்கியோ அடங்கியோ
ஒற்றைக்கோடாக வழிந்தாய்
கலங்கிய குளமானாய்
செய்தியறியாது
யாரேனும் விசாரிக்கையில்
விளக்கம் சொல்லும்
என் சாதாரண முகத்தை 
நல்லவேளை 
இதுவரை கண்ணாடியில் பார்க்க வாய்க்கவில்லை
நீ இல்லாமல் போனதைவிட
பெரிதாய் அலைக்கழிக்கும் போலிருக்கிறது
நினைவைப் பேசமுடிவது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...