நூடுல்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூடுல்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 06, 2019

கதைகளில் வந்த கானகம்

எங்கள் தெருவுக்கும்
பின்னாடி தெருவுக்கும் நடுவே
இருந்த கருவைத் தோப்புதான்
வடைதிருடும் நரி
கிணற்றில் விழும் சிங்கம்
விருந்துக்குப்போகும் குரங்கு
ஓநாயை ஏமாற்றும் கரடி
எல்லாம் வாழும் வனமென்று நம்பிக்கொண்டிருந்தோம்
பீக்காடாய்க் கிடந்த கருவைக் காட்டுக்குள் முள் குத்தாமல்
ஓரங்களிலேயே ஒதுங்கிவிட்டு
வரவைக்க
கருவைக்காடென்றே
சொல்லிவைத்த அம்மா கட்டிய கதை அது
கழித்துக்கட்டிய கருவைமண்ணில்
புதிய
தெருவே எழும்பி நிற்க
அறைக்குள் கழிப்பறை
அனைவர் வீட்டிலும்
தொலைக்காட்சி கார்ட்டூன்களில் நரி,
பரி,
சிங்கம்,கரடி எல்லாவற்றோடும் சிரித்து கதைபேசி
நூடுல்ஸ் விழுங்கும் பிள்ளைகள் தட்டிலிருந்து
ஆயாவுக்கு ஒரு வாய்
அம்மாவுக்கு ஒரு வாய்



வெள்ளி, பிப்ரவரி 22, 2013

அபி உலகம் -15


வாசல் வேம்பு வந்த கதை...
நீ வளத்தியா தாத்தா...?
தொட்டி ரோஜா 

தன சொப்பு நீரால் வளர்க்கும்
அபியிடம் எப்படிச் சொல்வது...?
"காக்கா போட்ட விதைம்மா..."
ஏன் போட்டுச்சு..?
வேப்பம் பழம் சாப்ப்ட்டுச்சா..அதான்..
அப்போ ஆப்பிள் குடுத்திருக்கலாம்ம்ம்ல ...
ம்ம்ம்ம் விழுந்த
நேரம் தாத்தாவும் நினைத்தார்
ஆப்பிள் மரம் பால்கனியில்
நீட்டும் கனியை...
***********************************
பாட்டியிடம் திருடிய வடையைக்
காகம் தவற விட்டால்
வடைமரம் முளைக்குமா...?

நூடுல்ஸ் எதில் காய்க்கும்..?

சாக்லேட் காயா பழமா...?
அபியின் கேள்விகளுக்கு
விடை அறிந்தால்
தாத்தாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...



வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...