இவ்வார(8 07 12)கல்கியில்
கரிசனத்தின்
பிறை வெளிச்சமே
பேரொளியாய்க்
கூசுகிறது...
இது பழக்கமில்லை....
புறக்கணிப்பின் இருள்
அகண்டமாய்ச் சூழ
அகட்டி அகட்டி விழித்தே
பழகிய விழிகளுக்குத்
தாளாது....
விரையும்
இடைநில்லாப் பேருந்தின்
சன்னலோரமாய்க்
காட்சிப்படும்
முதியவளோ,நோயாளியோ
பெறும் அதிர்வுக்கீற்று
போதும்...
புத்தனின்
மெலிய கரங்கள்
கபிலவஸ்துவின்
கனம் தாங்கா ...