ulagam kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ulagam kanavu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செவ்வாய், ஜூன் 05, 2012
வியாழன், ஏப்ரல் 05, 2012
போக்கிடம்
8 4 12 கல்கியில் வெளியான கவிதை 

மணல்
செங்கல்...மனைவிலை,
ஆட்கூலி...வேலைநிறுத்தம்
எந்தக் கவலையுமின்றி ,
மொட்டைமாடி
நீர்த்தொட்டியின்
பின்புறக்கூட்டிலிருந்து
எட்டிப் பார்க்கிறது
பெயர்தெரியாக்குருவி.
**********************************
கைப்பை,கடன் அட்டை,
கள்ள நோட்டு,சில்லறை
எந்தக்கவலையுமின்றி
தனியாளாய்ப் புறப்பட்டு
தந்திவடத்தில் அமர்ந்து
சிறகு தூக்கி
அலகை நுழைக்கிறது காகம்
இருப்பை எடுக்கிறதோ,
அழுக்கு கோதுகிறதோ...
***********************************
செவ்வாய், பிப்ரவரி 14, 2012
ஒளிவட்டம்
கடவுள்
வந்திருக்கிறார்
என்றான் தோழன் ....
அவரோடு பேச்சுவார்த்தை
உண்டு என்பான்..!
உன் அருகில்தான்
இருந்திருக்க வேண்டும்
பிரத்யேக நறுமணம்
உன் ஆடைகளிலும்
சிறிது படிந்திருக்கிறது...
"கடவுச்சீட்டு வாங்க
அல்லவா போயிருந்தேன்"
"மறந்து போனாயா
அவர் -சர்வ வியாபி"
நிஜத்தில்
பதற்றம் தொற்றியது
யாரது...
செய்தித்தாளும் அரைத்தூக்கமுமாக
முனனால் நின்றவரோ...
ஒற்றைக்கால்
மாற்றி மாற்றி மடித்து
சாய்ந்து பேசிக்கொண்டே இருந்தவரா...
சகலரும் பார்க்க
கையூட்டு அளித்தவனை
முனனால் அழைத்தவரா ?
குமுறிப் பொங்கியவர்...?
சலனமின்றி புகார் கேட்ட அதிகாரி...?
ஏதும் அடையாளம் முன்பே
சொல்லக் கூடாதா -கடிந்தேன்...
"பரவாயில்லை
உன்னில் கூடத்தான்
படிந்துவிட்டாரே ....
பிறகு பார்க்கலாம் "
என்றபடி விரைந்துவிட்டான்...
பார்க்கலாம்
என்றது...என்னையா...?
செவ்வாய், பிப்ரவரி 07, 2012
அபி உலகம்-4
அபி குளிக்கவில்லை
இன்னும்...
அப்பா சொன்ன ஆறு
...

வேண்டுமாம் !
அடுக்ககத்தின்
ஆறாம் தளத்தில்
நாலுக்கு ஆறு
குளியலறை வாசலில்
நடக்கிறது போராட்டம்!
**************************************
மின்விசிறிக்கு
நேராய்ப் படுத்ததால்
சளி பிடிக்குமென்றாள்
அம்மா...
கரடிக்கும் ஒரு குல்லா
வேண்டுமென
கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டாள்
அபி ......
தனக்குக் குளிரவில்லை என
பொம்மைகள் மேல் போர்த்தியபடி !
**************************************
எட்டுமணி ரயிலுக்கு
சீட்டு வாங்கிய
அப்பாவைக் கடிகிறாள் அபி
"ஒம்பது மணிக்குதானே
ஜோஜோ வரும்
சொல்லிக்கொள்ளாமல்
எப்படிக் கிளம்புவது?..... ,
ஜோஜோ தினம் வரும்
பூனை.
ஞாயிறு, ஜனவரி 29, 2012
திங்கள், ஜனவரி 16, 2012
ஞாயிறு, ஜனவரி 15, 2012
சனி, ஜனவரி 14, 2012
ஒளியே வாழி!
ஒளியில் தொடங்குகிறது நாள்.. ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில்நம்மை இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின் சக்தியை கண்டபோது ..
தொடங்கியது மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை
பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!
புதன், டிசம்பர் 14, 2011
இடிந்த வாசல்
காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்.....
காலம்கடந்து நிற்கும்
ஆசையில்
1972
என கட்டிய ஆண்டு
பொறித்துக்கட்டிய
முன்வீடு உடைத்து
காரை பெயரும் நடுவீட்டுக்குள்
கிடப்பவளின்
உறக்கம் ,கனவு,இளமை,குடும்பம்
யாவற்றின் மேலும்
ஓடிக்கொண்டிருந்தன
விரிவான சாலையின் வாகனங்கள்...
புல்டோசர் புதைத்த
அவள் வாழ்க்கையில்
புல் முளைக்காததை
உறுதிப்படுத்திப் போகிறது
தாழப் பறக்கும் விமானம்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...