mann லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mann லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஞாயிறு, ஜனவரி 29, 2012
திங்கள், ஜனவரி 16, 2012
சனி, ஜனவரி 07, 2012
புதன், ஜனவரி 04, 2012
பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர்
நிழல் பெற?
************************
வயலைவிற்று
வாழ்வு பெற்று
பானைபிடிக்கப் போன
பாக்யலக்ஷ்மிக்குப்
பல கேள்விகள் .....
செவ்வாய், டிசம்பர் 27, 2011
எங்கேந்த அதெல்லாம்...?
பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
இந்நாளின் எழிலரசி
தைத்துவிடும் தாழம்பூச்சடை
பின்னல் பிரிக்காது
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும்
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும்
ஈருளியில் எரிச்சலாகி
பேன்குத்தும் தாலாட்டில்
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும்
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
புரியாது விழிக்கிறாள்இந்நாளின் எழிலரசி
திங்கள், டிசம்பர் 26, 2011
ஞாயிறு, நவம்பர் 20, 2011
ஒளிச்சேர்க்கை
இந்த கோவை இலை
சிலேட்டு துடைக்கப்
பறிக்கப்பட்டிருக்கிறதா...
இந்த மா,புளி,கொய்யா
கல்லடிபட்டு
செங்காய் உதிர்த்திருக்கின்றனவா..
இந்த மருதாணி
இலை பழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா ...
இந்தவேம்பின் கீழ்
துணிவிரித்து உலுக்கி
பூ ,பழம் வாரப்பட்டிருக்கிறதா,..
இந்த இலந்தைமுள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா...
ஆமெனில்
இவற்றோடு
வாழ்க்கை -இருந்திருக்கிறது.
இலையெனில் -இறந்திருக்கிறது. ,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...