mann லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mann லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜனவரி 29, 2012

இப்போது பரணில்...

மல்லிகை கனகாம்பரம் 
நெருக்கித் தொடுக்கும் நேர்த்தி...
இழைகோலமா
கரைபதம் 
கருகா முறுவல் பக்குவங்கள் 
பொடிகளின் 
அரைபதம்,இடிபதம் 
கொதிமணம்
கொண்டறியும் குறைகள் ,
வகை வகையாய் வழிமுறைகள்..
**************************************.
பொட்டலம் ,பொதிகள் 
சுமந்த 
கழுதை முதுகின் 
கற்பூரப் பொட்டலம்.

திங்கள், ஜனவரி 16, 2012

ஆசை ஆசை




அகன்ற 
மலையடிவாரம் ..
விஸ்தாரமாய் வீசிப்போக 
காற்றுக்கு 
 
ஆசை... 
விழுந்தால் 
விரிவாக வளரலாம் 
விதையின் ஆசை...
ஆனால்...
வென்றது  மனிதன் ஆசை...
கொடியும் தோரணமும் 
குறுக்கு சாலைகளுமாய் 
புதிய நகர் 
இனிதே உதயம்...

சனி, ஜனவரி 07, 2012

புதுவை

கிளைகள்
கவித்த இருளால்
நகரம்
மறைந்திருந்தது
அதில்
வெளிச்சம்
உறைந்திருந்தது !
****************************
ஏதுமற்ற
வெளியில்
வெளிச்சம்
படர்ந்திருக்கிறது
இதில்
 இருள்
 நிறைந்திருக்கிறது  

இனி எதற்கும் யோசியுங்கள்

கடற்கரையில் காந்தி
தாண்டிவந்த காற்று
மனிதனைத்
தேடியது
இல்லை
எனச்சொல்ல
நாணி
இற்று விழுந்தன
எங்கள் மரங்கள்.

புதன், ஜனவரி 04, 2012

பாக்யலக்ஷ்மியின் தலைப்பொங்கல்


 
வெல்லம்
குக்கர் பொங்கலுக்கு
வெளியிலா-உள்ளேயா?
************
அறுக்காத வயலிலும்
நாலுகதிர் பிடுங்கி
நசுக்கிப்போட்டாவது
புத்தரிசி"பொங்கல் வைக்கும்
அம்மா
அங்காடி அரிசிக்கு
அச்சுவெல்லம்
கணக்கு அறிவாளா?
*********************
அடிநெல் தள்ள
ஏறி இறங்கினால்
தொட்டுக்கும்பிட்ட
பத்தாயத்தில்
எலிப்புழுக்கை
கிடக்கிறதாமே?
**********************
வரப்பு மூலையில்
தம்பியோடு
நட்ட வாதங்கன்றுகள்
ஒன்றாவது இருக்குமா
தூர்த்து வீடாக்கியவர் 
நிழல் பெற?
************************
வயலைவிற்று 
வாழ்வு பெற்று 
பானைபிடிக்கப் போன 
பாக்யலக்ஷ்மிக்குப் 
பல கேள்விகள் ..... 
  

செவ்வாய், டிசம்பர் 27, 2011

எங்கேந்த அதெல்லாம்...?

பேபியக்கா
தைத்துவிடும் தாழம்பூச்சடை
காயும்வரை 
பின்னல் பிரிக்காது 
ஓசிக்குஞ்சல உலா...
யார்வீட்டுப்பெண்
சடங்கானாலும்
வெளியில் வரும் 
கெம்புக்கல் திருகுப்பூ ...
குத்துககாலுக்குள்
மடக்கி இழுக்கும் 
ஈருளியில் எரிச்சலாகி 
பேன்குத்தும் தாலாட்டில் 
செருகும் கண்கள் ...
ஏழுவீட்டுக் கூரையும் 
கட்டெறும்பும்
சேர்த்தரைத்த மருதாணி...
************
எந்த வரியும்
 புரியாது விழிக்கிறாள்
இந்நாளின் எழிலரசி      

திங்கள், டிசம்பர் 26, 2011

மண்வாசம்

இலை,மலர் ,....அரும்பு ,
உதிர்ந்ததா.....
விழுந்ததா,,,
காய்க்குமா ,கனியுமா..
விதைவருமா
அது
முளைவிடுமா .....
இறங்கிக்கொண்டேயிருக்கும்
வேர்
விசாரிப்பதேயில்லை....

ஞாயிறு, நவம்பர் 20, 2011

ஒளிச்சேர்க்கை


இந்த கோவை இலை
சிலேட்டு துடைக்கப் 
பறிக்கப்பட்டிருக்கிறதா...

இந்த மா,புளி,கொய்யா 
கல்லடிபட்டு 
செங்காய் உதிர்த்திருக்கின்றனவா..

இந்த மருதாணி
இலை பழுக்க வாய்ப்பிலாது
துளிர்க்க துளிர்க்க
உருவப்பட்டிருக்கிறதா ...

இந்தவேம்பின் கீழ்
துணிவிரித்து உலுக்கி
பூ ,பழம் வாரப்பட்டிருக்கிறதா,..

இந்த இலந்தைமுள்
இளரத்தம் பார்த்திருக்கிறதா...
ஆமெனில் 
இவற்றோடு 
வாழ்க்கை -இருந்திருக்கிறது.
இலையெனில் -இறந்திருக்கிறது. ,

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...