கீறல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீறல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், செப்டம்பர் 30, 2020

வாழ்வு

 

லேசான வெம்மை

லேசான இருள்

கொதிக்காத நெற்றியைத்
தொட்டுப் பார்த்துவிட்டு
சன்னல் வழி கை நீட்டு

சுட்டுவிரலால் தொட முடிவதுதான் வானம்

சும்மா பரிதவிக்காதே

அவரவர் இருக்கிறார்கள்

அவரவர் பக்கம்

சுட்டுவிரல் நுனி வானத்தைச்
சற்றே உறிஞ்சு

சிறு கீறல் ரத்தத்தை உறிஞ்சுவாயே
அது போல

அவ்வளவுதான்

வாழ்ந்துகொண்டுதானிருக்கிறாய்

 

வெள்ளி, செப்டம்பர் 27, 2019

சற்றேற அதே உப்பு

என்னுடையது
என்னுடையது
என்று எதையெடுத்தாலும்
அதில் கொஞ்சம் தொட்டு ஒட்டிக்கொள்ளவும்
என்னைக்கிள்ளிக் 
கொஞ்சம் ஒட்டிவிடவுமே பழகிவிட்டது
உங்கள் சந்தோஷம் சொல்லும்போது
அந்தக்குமிழ் சிரிப்பின் சாயலில் 
இருந்த தருணத்தையும்
உங்கள் அழுகையின்போது
சற்றேற அதே உப்பு
கரித்த துளியையும்
மீளக்கொண்டுவந்து
பூரணமாவேன்
என்னுடையது அல்லாத உலகத்தை 
ஒரு கண்ணாடிக்கோப்பையாக
மேசைமேல் வைத்து பெருமிதப்படுவீரோ
இருங்கள்
கிளிங்
ஒரு துண்டு மற்றும் என் கீறல்
குருதியும் உப்பு கரிக்கிறது
ஆக இப்போது
அதன் பங்காளியானேன்

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...