பட்டாம்பூச்சி
வண்ணங்களின் மின்னலாய்ப்
பார்த்தது
பார்க்காது -
ஏழு கடல்,ஏழுமலை,
ஏழுவானம்,ஏழுசூரியன்
தாண்டிக் கொண்டேயிருக்கிறது
மனம்.....
தேடல் தொடர்கிறது..
சூரியனின் ஆரஞ்சுச்சாறு ,
வானின் நீலபானம்
பருகி இளைப்பாறியபடி
மீண்டும் ,மீண்டும்....
அதே நிறச்சாயல் தேடுகிறது ...
அந்த நிறம்
அதே நிறமா...
பனியில்,வெயிலில்
இளந்தூரலில்,
பருவங்களின் பாய்ச்சலில்...
கரையாது காணக்கூடுமோ ..
தேய்ந்த நிறம் தெரியாமல்
தாண்டிடும் சாத்தியம்
ஏற்காது..
தேடல் தொடர்கிறது..