குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குழந்தை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, அக்டோபர் 14, 2016

காலம் தப்பிய காலம்

ஆகாயத்தின் நிறம்
 மாற்றியே தீருவேன் என 
உதைத்துக்கொண்டு அழுதிருக்கலாம்
எதிரிலிருப்பவர் கையில் 
என்ன இருக்கிறது என கூச்சப்படாமல்
காட்டச்சொல்லியிருக்கலாம்
பொம்மைகளை 
விட்டுக்கொடுக்காது காத்திருக்கலாம்
பூச்சிக்கும் பாம்புக்கும் 
பெரிய வித்தியாசம் தெரிந்திருக்காது
முக்கியமாக
எப்போதும் ஒரேமாதிரி 

சிரிக்கவும் அழவும் முடிந்திருக்கும்
என்ன செய்ய
குழந்தையாக இருப்பது 

குறுகிய காலத்துக்கே அனுமதிக்கப்படுகிறது

வியாழன், பிப்ரவரி 21, 2013

அபி உலகம் -14




அபி கடல் பார்த்தாள் ..
"எவ்ளோ ஓஓஓஓ  ...தண்ணி...
யாரும்மா..ஊத்தினா...."
"ம்ம்ம் ...கடவுள்..."
"நீயும் அவங்கம்மா
மாதிரி இருக்கலாம்மா..."
டம்ளர் தண்ணீர்
கவிழ்த்தாலே குட்டு வாங்கும்
குட்டிக் கடவுளின் ஆதங்கம்...
****************************
கவனமாய்
முள் நீக்குகிறாள் அம்மா .
ஏன்மா..?
தொண்டையிலே மாட்டிக்கும் அபி.....
மாட்டிக்கிட்டா..
ம்ம்ம்ம் ..செத்துப்போய்டுவோம்..
எரிச்சல் தொனியில்
இன்னொரு கவளமும்
இன்னொரு நிமிடமும்
கடந்தபின் ...
"இந்த மீனோட அம்மா
இத சொல்லவே இல்லியாம்மா 
உன்ன மாதிரி..."
துண்டு மீன் தட்டில்
துள்ளியது மாதிரி இருந்தது !

திங்கள், பிப்ரவரி 18, 2013

அபி உலகம் -13




"தோஸ் கலர் டெஸ் (ரோஸ் கலர் டிரஸ் )
போடும் பள்ளிக்கு மட்டுமே போவேன் "
அபியின் தீர்மானத்தை
அரும்பாடுபட்டு இடம் பிடித்த
பள்ளி நிர்வாகத்திடம்
சொல்வது எப்படி...
    *********************
தோழிB.தர்ஷினி
 "B"பிரிவில் சேர்ந்துவிட்டாள்
 "R" அபி மட்டும்
ஏன் "C" பிரிவுக்குப் போகவேண்டும்
அபி
அப்பாவுக்கு 
Cயில் தொடங்கும் பெயர்
தேடிக்
கொண்டிருக்கிறாள் 
பிரிவு மாற்றுவதைவிட
பெயர் மாற்றுவது சுலபமாம்

***********************
அபி அப்பாவின் தற்போதைய கவலைகள்
.....

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அபி உலகம் -12

அபியின் புதிய 
அணிகலன் 
வழக்கம்போல 
பொம்மைப்பெண் காதில்,....
பதறிய அம்மா 
"உலகமே தெரியலியேடி உனக்கு..
எனக் கலங்க ,
ஓடிப் போய் 
தாத்தாவின் புதுக் கண்ணாடியோடு 
வந்தாள் அபி.
"இதப் போட்டுக்கறேம்மா 
இனிமே செரியாயிடும் ......
*********************
 தொண தொவென பேசியபடி 
சுற்றிக் கொண்டிருந்தாள் அபி.
"நானே கவலையா 
இருக்கேன்...தெரியுதா உனக்கு ?
சும்மா இரு...."
...............
இருநொடிக்குப்பின் 
"கவலைன்னா என்னம்மா...?
சும்மா இருந்துவிட்டாள் 
அம்மா.

வியாழன், அக்டோபர் 11, 2012

அபி உலகம் -10

சாலை தாண்டி ஓடித் திரும்பும் 
அபியைத் திட்டுவதா ,
பத்திரமாக மீண்டதற்கான 
பெருமூச்சோடு 
அணைத்துக் கொள்வதா 
எனத் திகைத்திருக்கும் 
அம்மாவை 
மேலும் குழப்புகிறாள் 
அந்தக் காலிமனையில் 
கொத்தித் தின்ன ஏதுமற்று 
ஏமாந்து திரும்பும் 
காக்கைகளிடம் 
காட்பரிஸ் பகிர்ந்து 
திரும்பும் அபி...

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...