தாத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தாத்தா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 07, 2020

பாப்பூ -1

 


தினமும் சன்னலுக்கு வரும் காகத்துக்கு
ஒரு பிடி சோறு வைத்துப் பழகிய
பாப்பு
காக்காஃபிரெண்டாக
சொல்லிக் கொடுக்கிறாள் 
பக்கத்துவீட்டுத் தோழனுக்கு
*************************************


 

பிரௌன் நிறத்தை
அரைத்தீற்றலாக இழுத்து வைத்த பாப்பு
அங்குமிங்கும் குனிந்து நிமிர்ந்து
தேடிக்கொண்டிருந்தாள்

பச்சை பென்சிலைக் காணோமாம்

பிரௌன் மண்ணில்
செடி எப்படி முளைக்கும் விசனத்தோடு
தேடல் தொடர்கிறது

அங்குமா
அலுத்துக்கொண்டார் தாத்தா


 ************************************************************


வியாழன், மே 23, 2019

பெற்றதும் கற்றதும்

காதோரம் வழிந்துகொண்டிருந்த 
வியர்வையைத் துடைக்காமல்
நூறு உதிரிமல்லியும்
ஒரு குட்டி தர்பூசணியுமாக
தேர்வு முடிந்த பேத்தியைப் பார்க்க 
பேருந்து நெரிசலிலிருந்து 
இறங்கிப்போகும் அவள் பின்னால்

 நாய்க்குட்டி போலப் போய்க்கொண்டிருக்கிறது
எங்கள் ஊர் வெயில்

*********************************************************
பாப்பு விட்டுப்போன
குரங்குபொம்மை
தேர்க்கடையில் வாங்கிய பஞ்சுபொம்மை
சொப்புச்சாமான் அந்தஸ்து பெற்ற 

வீட்டின் தட்டுமுட்டு சாமான்கள்
நினைவாக எடுத்து வைத்து
விடுமுறைக்குத் தயாராகும்
தாத்தாவின் கவலை
எங்கோ ஓடிப்போய்விட்ட வெள்ளைப்பூனை
இடுகாட்டில் குடியேறிவிட்ட
மனைவி
இரண்டுநினைவிலும் அழுதால் 

எப்படி சமாளிக்க?
******************************************************

திங்கள், ஜூன் 16, 2014

இன்னொரு மரணம்


கட்டைல போறவனே 
என யாவரையும் கரித்த 
பரமசிவம் தாத்தாவை 
நகர
மயானம் 
காரில்தான் அழைத்தது.

ஈட்டாத செல்வம்
முகூர்த்த நாள் மரணம் 
பூஇறைக்காத 
துப்புரவான பயணம் தாத்தாவுடையது 

சமைக்க அலுப்பான 
ஏதோ ஒரு இரவு போலவே 
மயானத்திலிருந்து திரும்புகையில் 
பக்கத்துக்கு வீட்டில் நாதஸ்வரமும் 
மேசைமேல் பரோட்டா பார்சலும் 

"போனா இப்பிடிப் போவணு ம்" 
"பொசுக்"கென்று முடிந்த வாழ்வை 
எடுத்தபின் வந்த அத்தை 
பாராட்டிக் கொண்டிருந்தாள் 
குறைந்தபட்சம் -அவளாவது 
அழுதிருக்கலாம் இல்லை 
சண்டைபோட்டிருக்கலாம் .....

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...