காரை பெயர்ந்த
கட்டைச்சுவர் ..
புதுக்கருக்கில்
சுவரொட்டி மறுக்கும்
ஆள் உயரம்...
...............
மதில்கள் மாறினாலும்
விரிந்த விழிகளோடு
பூனை அங்கேயே...
கண்ணாடிச் சில்லும்
கம்பிவலையும் கூட
அரூபமாய்த் தள்ளிவிட்டு
தன இடம் விடாமல்
எப்போதும்போல்
இப்போதும் பூனை...
மதில் நிலையற்றது !
பூனை நிலையானது!
19 3 12 உயிரோசையில் வெளியானது