சந்தேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்தேகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூலை 21, 2013

எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கிறது


யார் உன்னோடு இருக்கிறார்கள் ?
யார் உன்னோடு வருகிறார்கள்...
யாரும் யாரோடும் இல்லையாம்
தீர்மானமா ,திகைப்பா ,
அச்சுறுத்தலா ,அவமானமா
அன்றி ஆசுவாசமா....


யார் இருப்பதென்பதை
யார் தீர்மானிக்கிறார்கள் ..?
யாரோடு என்பதும்
யாரால் தீர்மானம் செய்யப் படுகிறது...
யாரின் நீ என்பதும்
உன்னின் யார் என்பதும் கூட
உன்னாலா,அந்த யாராலா,
அன்றி யாரோவாலா 


யாரும் இல்லாவிடிலோ
யாரோடும் இல்லாவிடிலோ
யாரின் துயரமது....


கேள்விகளின் வெள்ளத்தில்
மூழ்கி அபயக் குரலெழுப்புவது
யாரென்று மட்டும்
கண்டு கொள்ளாமல் நகருங்கள்

வியாழன், ஜூன் 06, 2013

எனக்குத் தெரியாத நான்


அலைச் சலனத்தில்
துள்ளி நழுவும் சிறு மீனா...
மிதவைத் தெப்பத்தில்
சேர்ந்த குச்சியா....
அதையும் செலுத்தவல்ல
துடுப்பா ...

கரையோரம் நின்று
ஈரத்தில் ஊறும் வேரா ,
உதிரும் துளிரா ..
நீலமும் பச்சையுமிலா
நிறச் சேர்க்கையா ...
எங்கோ இருக்கிறேன் !
எங்கிருக்கிறேன் ....?
இருக்கிறேனா ...?

சனி, மார்ச் 30, 2013

சருகு துளிர்க்கும்



சந்தேகங்கள்
எல்லா நேரங்களிலும்
தீர்ந்துவிடுவதில்லை..


முயற்சிகளில்
உதிர்ந்து கொண்டே இருக்கின்றன
ஞான வனத்தின் பழுத்த இலைகள் ...


அவை சருகாகி
அலைக்கழிவதும்,மிதிபடுவதும்
ஆமோதிப்பின் தலையசைப்புகளாய்
மொழிபெயர்க்கப்படுகின்றன ....


அண்ணாந்து கொண்டிருக்கும்
நீ
துளிர் தரிசனத்தில் ...
நான்

சருகைப் பெருக்கியபடி ....

நீரோடை மட்டும்
எப்போதுமே சுழித்தோடுகிறது...
குமிழிடும் வட்டம்
அமிழ்த்திக் கொள்ளும் நாள் வரை
நாம்
சருகோ..தளிரோ...

துளிர்க்கவோ...... உதிரவோ .....


வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...