ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஊரடங்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 30, 2021

காட்சித் தட்டு பொம்மைகளின் உரையாடல்

 யாரும் வராத வீடுகளில்

சோபாக்களின் மேல்
நாற்காலிகள் கால் நீட்டிக்கொள்கின்றன
அடுத்தடுத்து தொங்கும்
புகைப்படங்கள்
திரும்பி
எதிர் எதிராக உட்கார்ந்து
கதைக்கத் தொடங்குகின்றன
காட்சிப் பேழையின் பொம்மைகள்
கைகளை உதறிச் சொடுக்கு எடுத்துக் கொள்கின்றன
அதிலொன்று
துறுதுறுவென்று
கேட்கிறது...
மறைமுகமா என்ன சொல்றாங்க
இந்தக் கதவு திறக்க முடியுமா இல்லையா
முன்னாளில் அவ்வீட்டுக் குழந்தை விளையாடி
இப்போது காட்சித்தட்டுக்குக்
குடிவந்துவிட்ட கரடி பொம்மை
இரு இரு...
நானே அவனுக்கு விசா கிடைக்குமோ இல்லையோன்னு இருக்கேன்...
வீட்டுத்தலைவி மெல்ல வந்து சின்னத்திரைக்கு உயிரூட்டுகிறாள்...
போச்சு..
ஒண்ணும் புரியப்போறதில்லை
ஊரடங்கா..
ஊரடங்கு மாதிரியா
கிசுகிசுத்துக் கொள்கின்றன பொம்மைகள்

வெள்ளி, அக்டோபர் 02, 2020

பாதை மாறிய பயணங்கள்

 


 

எதைக் கொண்டு வந்தோமென்றும்
தெரியாமல்
எதைக் கொண்டு போகிறோமென்றும் 
தெரியாமல்
போக வேண்டும் என்றுமட்டும் 
தோன்ற வைத்து விடுகிறீர்கள்.
அவர்களும் கிளம்பி விடுகிறார்கள்
நீங்கள் குப்பையில்
வீசியவற்றை மாட்டிக் கொண்டாவது

நம்பிக்கைதான்
நெடுஞ்சாலைகளின் மீது

அவர்களில் எவரோ வார்த்த
தார்தானே 

**************************************************************

மாறிச்செல்லாத பாதை என்று அறியப்பட்ட
தண்டவாளங்களும்
நூற்றுக்கணக்கான கருவிகளும் தாண்டி
எங்கள் பயணங்கள்
எங்கெங்கோ செல்கின்றன

இரக்கமுள்ள மனிதர்கள்
பொட்டலங்களோடு வரும்வரை
திசையறியாது நடந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்

கால்களுக்குப் பசிப்பதில்லை

ஆனால் அம்மா
இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமெனச்
சொல்லாமல்
ஏன் உறங்குகிறாய்....




ஞாயிறு, செப்டம்பர் 27, 2020

தனிமைக் காலம்

 கைப்பிடிகளைப் பற்றாது கதவு திறக்கச் சொன்னாய்

பெருமணிகளின் நாவுகள் ஆர்வத்துடன் அக்கணம் நோக்கிக் காத்திருக்கின்றன
அசையாது
தானாய்ப்பிளந்து வழிவிடும் கடலுக்குக்
காத்திருக்கும் கூட்டத்தில் தலைச்சுமையோடு நிற்கிறேன்

************************************************
வேப்பம்பூங்கொத்துகளை இழுத்து வளைக்க ஒரு கரமும் நீளவில்லை
தார்ஊற்றப்படாத சாலையின் செம்மண்
வாகன அழுத்தத்தில்
பறக்கவில்லை
யாருமே நடக்காத பகலுக்குப் பழகிவிட்ட தெருநாய்கள் திடீரென்று தென்படுபவனைத் திருடனாக்குகின்றன

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...