யாரும் வராத வீடுகளில்
சனி, அக்டோபர் 30, 2021
காட்சித் தட்டு பொம்மைகளின் உரையாடல்
வெள்ளி, அக்டோபர் 02, 2020
பாதை மாறிய பயணங்கள்
எதைக்
கொண்டு வந்தோமென்றும்
தெரியாமல்
எதைக்
கொண்டு போகிறோமென்றும்
தெரியாமல்
போக
வேண்டும் என்றுமட்டும்
தோன்ற வைத்து விடுகிறீர்கள்.
அவர்களும்
கிளம்பி விடுகிறார்கள்
நீங்கள்
குப்பையில்
வீசியவற்றை
மாட்டிக் கொண்டாவது
நம்பிக்கைதான்
நெடுஞ்சாலைகளின் மீது
அவர்களில்
எவரோ வார்த்த
தார்தானே
**************************************************************
மாறிச்செல்லாத பாதை என்று அறியப்பட்ட
தண்டவாளங்களும்
நூற்றுக்கணக்கான கருவிகளும் தாண்டி
எங்கள் பயணங்கள்
எங்கெங்கோ செல்கின்றன
இரக்கமுள்ள மனிதர்கள்
பொட்டலங்களோடு வரும்வரை
திசையறியாது நடந்துகொண்டே இருக்கின்றன
கால்கள்
கால்களுக்குப் பசிப்பதில்லை
ஆனால் அம்மா
இங்கிருந்து எங்கு செல்ல வேண்டுமெனச்
சொல்லாமல்
ஏன் உறங்குகிறாய்....
ஞாயிறு, செப்டம்பர் 27, 2020
தனிமைக் காலம்
கைப்பிடிகளைப் பற்றாது கதவு திறக்கச் சொன்னாய்
வாழ்ந்தா....
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
நேசத்துக்கு விளக்கவுரையை அவள் ரத்தத்தால் எழுதும் சமூகத்தின் விஷப்பிஞ்சு அவன் வெம்பும் வாழ்வுகளைப்பற்றி ஒருநாள் பேசிக்கலைவோம் கல்லெ...
-
மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...
-
மஞ்சள் சுண்ணாம்பு உதிர்ந்த காரை ஒழுகும் கூரை அடியில் சத்துணவு உண்டுவிட்டு பெயர்ந்த சிமெண்டுக் குழியில் இலவச சீருடை மா...