பண்பலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், அக்டோபர் 23, 2018

அறியவும் கூடும்



யாருமிலாப்பொழுதின் ஒற்றை முக்காலி காப்போன்
பண்பலை துணையில்
பயத்தையோ தனிமையையோ விரட்ட முற்படுகிறான்

தூசிவரா குளிரினுள் அமர்ந்து
கண்துடைத்தபடி
ஆத்தங்கர மரமே வை ஒலி கூட்டுவதைப்பார்த்தால்
ஆச்சர்யம் வரலாம் உங்களுக்கு

 விட்டுவந்த
ஆற்றங்கரையும்
கிள்ளிப்போட்ட அரசமர இலையும்
தள்ளிநின்று தள்ளியே போன துணையும் 
விழித்துரும்பானதை
அறியமாட்டீர்களல்லவா 

அறியவும் கூடும்
"ஆற்றங்கரை ஓரத்திலே யாருமற்ற 
நேரத்திலே 
வீற்றிருந்த மணற்பரப்பு" கேட்டு 
மௌனம் போர்த்திக் கொள்பவர்கள்-

ஆகஸ்ட் 6 காமதேனு இதழ் -
                             

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

MY SONG..MY STORY...1



தேநீர்க்கடையின் 
பண்பலைப்பாடலையோ,
தேநீரையோ-சிலாகித்தபடி 
நீங்கள் கூடியிருக்கையில் 
மௌனமாகச் சில்லறை தந்து 
விலகிப்போகும் 
அவனும் ஒரு பாடலாசிரியன் என 
உங்களுக்குத் தெரியாது ..
அவன் தெரிவிப்பதுமில்லை...
மிகுந்த பிரயாசையோடு 
அவன் எழுதிய வரிகளை 
கருவிகள் விழுங்கியதை -
அவன் பொறுத்துக் கொண்டான் 
வெற்றிக்குப்பின்னான 
ஒரு நேர்முகத்தில் 
தான் தாண்டியதான சவால்களில் 
சொல்லிக்கொள்ளலாம் என்று...!
எவர் பெயரும் போடாது
 ஏதோ ஒரு படத்தின் பின்னொட்டாய் 
வந்த பாடலை 
நூறாய் அழுத்தும் கள்ளத்தகடுகளும் 
ஏந்தவில்லை...
அவன் எழுதிய அந்த ஒற்றைப்பாடலை 
பெயர் சொல்லாமல் யாரேனும் 
முணுமுணுத்தால் கூடப் போதும்.
யாரோ போல் இவனே கேட்டும் 
இருப்பில் இல்லாததாய் 
வானொலிகளும் மறுத்துவிட்ட 
அவன் பாடலை நீங்கள் 
அறிவீர்களா?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...