வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 09, 2016

மகளிர் தினம்

வலியைப்பற்றி பேசவும்
வாழ்த்தி வாழ்த்தி நகரவுமான
நாள் நிறைவுபெற்றது.
எப்போதுமான 
தன்னிரக்கம் 
எப்போதுமான ஓட்டம்
எழுந்திருக்கையில்
இருக்கும் தலைமாட்டில்

திங்கள், ஆகஸ்ட் 05, 2013

சில சமயங்களும் சில கடமைகளும்

தாளின்
நிறமும் வனப்பும் நீ தேர்ந்தாயோ


ஒற்றைமலரின்மேலிருக்கும்
பட்டாம்பூச்சி முடிச்சு
யார் கற்பனை...
கத்தரித்துக் குப்பைக்கூடையில்
போடுவதான அல்ப ஆயுளை
சற்றே நீட்டித்தாலென்ன...
பொதியோடு அலமாரியில் வைத்த
பரிசைப் பிரிக்காமலேயே
கொடுத்தவனின் இறுதி அஞ்சலிக்குப்
போன கொடுமை வேறு அச்சுறுத்துகிறது...
நாட்காட்டி,நேரங்காட்டி,
கண்ணாடிக்குள்
அழகெழுத்துக்களில் பூத்தூவி
தத்துவங்காட்டி.....
சச்சதுரத்துக்குள் வேறென்ன ...

பிரிக்காது கைமாற்றவோ
எடுத்தெறியவோ கத்தரிக்கவோ
யோசிக்கின்ற
என்போலன்றி
பரிசை
விலைமதிப்பு சொல்லிக்
கட்ட உத்தரவிட்டபடி
பணப்பையோ கடன் அட்டையோ
துழாவியிருக்கலாம் நீ...

துளி அன்பு அக்கறைக் கீறல்
பரிவின்சுவடு ஏதுமின்றி
நீ வாங்கிய கணத்தின் வெறுமை
காணமுடிந்தால்

நிம்மதியாக யாருக்கும் கொடுத்து
விடுதலை பெறலாம்

ஞாயிறு, ஜனவரி 13, 2013

ஒளியே வாழி!



ஒளியில் தொடங்குகிறது நாள்..
ஒளியில் தொடங்குகிறது உற்சாகம்
ஒளியில் தொடங்குகிறது உழைப்பு !
இருளில் நம்மை
இழந்துவிடாமல்
தினம்
கிழக்கின் வாசலில்
நீள்கிறது கதிர்க்கரம் !
வெளிச்சத்தின்
சக்தியை
கண்டபோது ..தொடங்கியது
மனித சரித்திரம்!
*****************************
வெளிச்சக் கூழைக்
குடித்துக் குடித்து
ஆடி வளர்கின்றன
பச்சைப் பயிர்கள்..
வெளிச்சம் தின்று
வெளிச்சம் தின்று
விரிகின்றன விருட்சங்கள் ...
உண்ட ஒளியை
உருட்டித் திரட்டி
காயாய் பூவாய்
கனியாய்க் கிழங்காய்
மனிதனுக்கு
ஊட்டி வளர்க்கின்றன
தாவரங்கள் ...
********************
நம்பிக்கை பொய்க்கா வண்ணம்
நடத்துவாய்
ஒளியே வாழி!வாழி!

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...