பால்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பால்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 13, 2022

சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி

 ஏதோ சொல்ல வந்தாய்

சொன்னாய்
ஆனால் முழுமையாக சொல்லப்பட்டதா
முழுமையாக கவனிக்கப்பட்டதா
இருவருக்குமே தெரியவில்லை
பின் எப்போதோ ஒருகணத்தில்
சொன்னேனே என்பாய்
சொல்லப்படாத சொற்கள் என்னவாயின
பால்யத்தில்
இதழ்க்கடையிலோ
உதடுகளிலோ
ஒட்டிக்கொண்டிருக்கும் கொஞ்சூண்டு தித்திப்பை
நா நீட்டி இழுத்து
சப்புக்கொட்டியதுபோல மென்றுவிட்டாயா

******************************************
மொத்த வீட்டின் இருளுக்கும்
சவால் விடுக்கிறது ஒற்றை நீலப்புள்ளி
சுழியத்தைப்பருகி
சுழியத்தைக் கேள்வி கேட்கும் நீலப்புள்ளி
இந்த வேம்பு இங்குதான் இருக்கிறது
அட குயிலே
நீ ஏன் இந்த கிடுகிடு நிசப்த இரவில்
எசப்பாட்டு பாடி எனக்குத் துணையிருக்கக்கூடாது
காலையில்தான்
வெளிச்சத்தின் பின்னணியில்
சேர்ந்திசை பாடுவாயா
நீ குக்கூ என்றால்
குக்கர் உஷ் என்கிறது

செவ்வாய், அக்டோபர் 16, 2018

கனவு செருகிய எறவாணம்

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்கு கூட கசப்பேறிய பின்னும்

**********************************************************
கனவுகளைச்செருகிவைத்த எறவாணம் 
யானைவிரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்

**************************************************************

திரளும் கண்ணீரைத்
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர்வார்த்த முல்லையின் நிறம் 

அப்படித்தான் இருக்கும்

***************************************************************
பழமுதிரிலோ,உழவர் சந்தையிலோ 
பேரம் பேசியோ பேசாமலோ 
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம் 
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின் 
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப்பிய்த்த சுரைப்பிஞ்சின் 
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை

அந்தப்புறங்கையில் பாருங்கள்
அதே பனித்துளி

****************************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...