மரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், மே 27, 2021

உருகாத நஞ்சு

 காதருகே மணியளவு மரு'தான்

கீதாக்காவை அடையாளம் காட்டியது
கூடைப்பந்து பயிற்சிக்களத்தில்
டீச்சரின் செல்லப்பெண்ணாக
எங்களையெல்லாம் சட்டெனக் குட்டும்
அதிகாரம் கொண்டிருந்த கீதாக்கா
மணியாகிவிட்டால்
உச்சந்தலையை ரணமாக்கிய
கீதாக்கா
இடுப்பில் குழந்தையோடும்
தலையில் கட்டோடும் அழுதபடி நிற்கிறாள்
மருவெல்லாம் இல்லாதமுகம் எத்தனைவசதி
யாரோ ஒரு காவலராக விசாரிக்க முடியும்
**************************************************
இன்னும் தோயாத தயிர்போல
உயிர்ப்பற்று தளும்பும் புன்னகையோடு வாசல் திறக்காதே
நிச்சயமின்மை
என்பது நஞ்சு
கருணையாக அதை உருக்கிக்கொள்ள விதிக்காதே
அதைவிட
யாருமற்ற பாவனையில் அந்தக்கதவு திறக்காமலே கிடக்கட்டும்
**************************************************
போதும் என்ற சொல்லை வெயிலும் கேட்பதில்லை
மழையும் கேட்பதில்லை
நீயும் கேட்பதில்லை
அதற்காகச்
சொல்லாமலிருக்க முடியுமா
*******************************************

புதன், செப்டம்பர் 23, 2020

மரு வைக்காத இரட்டை வேடம்

 இருந்தது என்றாய்

இருந்தது என்ற
இறந்தகாலத்துக்காக வருந்தவா
இருந்தபோது
நான் அறியாமல்
இருந்ததற்கு வருந்தவா
இல்லை
எப்போதும்போல் இருந்துவிடவா

***********************************************
வெங்காய வடகத்தைக்
கிள்ளிக்கிள்ளி வைக்கும்போதுகூட
திட்டமான
இடைவெளிகளில் வைப்பவள்
இதை ஏன் இப்படி
கொசகொசவென்று வைத்தாளோ
குறுக்கே ஒரு அம்புக்குறி இட்டாயோ
புரிந்தது

**************************************************
நிஜத்தில் ஒரு மரு கூட
வைத்துக் கொண்டு
வரமாட்டேன் என்கிறது
இன்பமும் துன்பமும்
*************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...