கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, செப்டம்பர் 20, 2020

செம்பருத்தி கனம்

திரும்பிவந்து பார்க்கும்போது 
நிச்சயமாக இவ்விடம்தானா 
எனச்சொல்ல முடியாதபடி 
எல்லாம் மாறிப்போய்விடுகின்றன 
தூரங்களைத் தாண்டுவது 
பாதுகாப்பு என்றிருந்த நாளில் 
பாழ்பட்ட மனைக்கு என்று 
எவ்விதப் பொருண்மையும் இல்லை 
கனவுகளிலும் சிரித்துக்கொண்டிருந்த 
 ஒற்றைச் செம்பருத்திச்செடிதான் 
 கற்றுத் தந்திருந்து கனத்தை 
புத்துருக் கொண்ட இடங்களில் 
 செம்பருத்திக்கு மண்ணில்லை

புதன், ஏப்ரல் 10, 2019

கண்ணே கலைமானே

இனிதானே கிளம்பப் போகிறாய்
என்னவாம்
சிடுசிடுப்பா
சரி நான் இங்கு இல்லை
நீ அங்கேயே இருந்துவிடு
இந்த இடம் இப்படியே இருக்கட்டும்
சில்லென
**************************************************
ஒளிஇறைந்த பாதையில்
நடந்தபோதும் உதறிக்கொண்டாய் கால்களை
சொற்களிலிருந்து தெறித்த 
பூச்சிபுழுக்களை 
மிதித்தாயா என்ன

**************************************************************

கனவென்று சொல்வதற்கில்லை
நனவென்றும் சொல்ல முடியாததை
கனவென்றாவது சொல்லலாமோ
********************************************


வெறுப்பு சொட்டிய சொற்களை 
நீ வாரியிறைத்தபோது
எங்கிருந்தோ 
கண்ணே கலைமானே ஒலித்துக் கொண்டிருந்தது
உன்னை 
,உன் சொற்களைப்
புறக்கணித்திடும்
வரிசையில்
கண்ணே கலைமானே'வையுமா...
************************************************





வியாழன், ஆகஸ்ட் 31, 2017

கனவின் சீதனம்

இந்த முகத்தை மறந்திருக்கவே கூடாது
ஆயினும்
எங்கேயோ பார்த்த சாடையிலும் 
ஒருநாள்
தோன்றுகிறது
*****************************************************

கனவுகளுக்கு அர்த்தம் உண்டா என்ன
நினைவுக்கே இன்னும்
தெரியாதபோது

*************************************************

கூரையில் வழிவதற்கும்
சன்னலில் இறங்குவதற்கும்
வேறுபாடு தெரிகிறது
மழைக்கு
சப்தத்தாலும் ருசி

************************************************
அத்துணை நஞ்சையும்
அள்ளிப்பருகச் சொல்லும் வாழ்வை வாழ
ஒரு கோப்பை சீதனம்
தந்தது நீயா
*******************************************

கட்டிடங்களிலிருந்து வெளியேறிவிடலாம்
கட்டுகளை என்ன செய்ய
முளைக்குச்சி அத்தனை ஆழம்
கட்டுக்கயிறு அத்தனை இறுக்கம்

******************************************************




சனி, டிசம்பர் 07, 2013

நனவிலி

உன் சொல்லுக்காகக் காத்திருக்கிறேன் 
புதிய மொழி கற்றவன் 
எழுத்தெழுத்தாக இணைத்துப் பார்த்து 
மனசுக்குள் உச்சரித்து ஒத்திகை பார்த்து 
வெட்கமோ ஆர்வமோ தெறிக்கப் பேசுவது 
போல் 
நீ அன்பின் மொழிக்குள் 
அமிழ மாட்டாய் ...
தெரியும்...
வறுமை உணவே ஆடம்பரமாக்கியபோதும்
ஆவல் தின்பண்டக் கனவு தராதா என்ன....
நான் கனவிலிருக்கிறேன் ...


வெற்றுக் கோப்பைகளுடன் 
நீ வாசல் திறக்கிறாய் 

வெள்ளி, ஜூலை 12, 2013

அவற்றைப்பேச விடாதீர்கள்

வண்ணத்துப் பூச்சி என்னென்ன
நிறங்களில் பறக்கிறது
ஆய்ந்து கொண்டிருந்தேன் ..
வண்ணத்துப் பூச்சி எங்கெல்லாம்
அமர்கிறது
என்ன வேகம் ..எத்தனை தூரம்...
கவனிப்பதே வேலையாய் இருந்தேன்
வண்ணத்துப்பூச்சியை
பிடித்துக் கொடுப்பவனை
நடுக்கத்துடன் பார்த்தவாறே
அட்டைப்பெட்டிக்குள்
இட்டு மூடியிருக்கிறேன்


பார்க்காத கலவைகளிலும்
அறியாத தீற்றல்களிலும் கூட
வண்ணத்துப் பூச்சியை
வரைய முடியும் என்னால்....
ஒருபோதும் சிறகு முளைக்காத
கூட்டுப் புழுவல்லவா  நீ
என நேற்றுப்  பார்த்த
வண்ணத்துப் பூச்சி ஏன்
கேட்டுத் தொலைத்தது ....

புதன், ஜூன் 12, 2013

என் தொடக்கமும் தொடர்ச்சியும்


ஒளியைக் கிள்ளி
உதட்டில் பொருத்திக் கொண்ட
அந்தக் கணத்திலேயே
உன் கண்களில்
தீச் சுரந்தது
எனக்குத் தெரியும் ...!



இருள்
உன்னை அவித்துவிடும்
என மனப்பாடம்
சொல்லித் தந்தாய்...
எனக்கு மையிட்டுக் கொள்ள
அதைக் கைப்பற்றினேன் ....


திரைச் சீலைகளின்
பின்னிருந்து பேச மறுத்து
அவற்றையும்
சேர்த்துச் சுமந்தபடி
சுழன்றாடும் என்
பாத சரங்கள் உன்மேல்
விழும் இடித் துண்டுகள்
எனக் கதைக்கிறது
நூற்றாண்டுகள் கடந்த உன்
துர்க்கனவின் பாடல்

ஞாயிறு, ஜூன் 09, 2013

புத்தனும் நானும்


வனமலர்கள் சில மலரக் கூடும்
வெடிப்பெலாம் குழம்ப
குளம் நிறையக் கூடும்...
ஓடியாச் சுள்ளிகளோடு
உயர்ந்து நிற்கும் மரம்
பசிய துளிர்களின் வாசத்தைத்
தானே தலையசைத்து
ரசிக்கக்கூடும் ....
விசும்பின் துளி வீழும்
தேவகணத்தைத் தொடரும்


இந்த வரிசையில்
தேவனுடையதோ-
சாத்தானுடையதோவான
கனியும் கிடைக்குமென ...


கிடைக்குமென
காத்திருக்கிறான்
பாசி படர்ந்த புத்தன்.....
பாசி
ஈரத்தின் விளைவல்லவென
நோன்பு தொடங்கு
முன்  யுகத்திலேயே
உபதேசித்தது நினைவிருக்கிறது.

வெள்ளி, ஏப்ரல் 19, 2013

பொருளறியாமல் .....




அலைகளினூடே சாய்ந்து ,
சரிந்து....
அடிவைக்கும்  பாதங்களை,
துடுப்புகளின் தீண்டலை,பாய்ச்சலை
 சுடுகதிர்களின் ஆக்கிரமிப்பை,
நீர்த் தட ஆறுதலை ,
உலவலின் விறுவிறுப்பை ...
எதிர்நோக்கிக் காத்திருக்கின்றன
கரையோர ஓடங்கள் ...


மௌனித்துக் கிடக்கிறது கரை...

முகட்டின் இப்புறமான
நதியின் தடமறியாது
மலையேறிக் கொண்டிருக்கிறது
கூட்டம்.

வெள்ளி, மார்ச் 29, 2013

கோள் தாண்டி வந்தவள்

 













இப்படி ஒரு வினாவை
நான் எதிர்கொண்டதேயில்லை...


கனவு என்றால் என்ன...? 


சொல்லோ ,பொருளோ புரியா வினாவோ,
அங்கதமோ எனக் கடக்க முடியாவண்ணம்
உன் குரல் உறுதியாக மீண்டும்...


கனவு என்றால் என்ன....


உலகாயத விடையா ,தத்துவமா,
மருத்துவமா,ஆன்மீகமா
எப்படி விடையிறுப்பது ..?


சொற்களைத் தேடினேன்..
மிரட்சியில் தலைதெறித்தது
அவைதானாம்..


கோடிட்ட இடங்களாகிவிட்டன
என் கவிதைகள் ....


கையடக்கமான தலையணை
நழுவிக் கரைந்தது...


கனவின் தடம் அறியாதவளே
நீ
உறக்கம் தொலைத்தாயா...
உறங்கியே தொலைந்தாயா...


அப்பொழுதுகளிலும்
கனவினை
அம்மாவின் சீலைத் துண்டாகக்
கைக்குள் சுருட்டியே
கிடத்தலன்றோ  மனித வழமை...


ம்ம்ம்ம்ம்
உன் ஊரை நான் கேட்கவேயில்லை...
.

சனி, மார்ச் 23, 2013

பொருத்துக!(முடிந்தால்...)





விதைத்து,முளைத்து,
உயர்ந்து,விரிந்து,
இலையுதிர்க்கத் தயாராகும் என்மரம்
இப்போதுதான்
உன்னால் நடப்பட்டிருக்கிறது...

கீற்று கீற்றாய் வளர்ந்து
பாலொளி பரப்பி
தேய்பிறை அச்சத்தோடே
நிற்கும் உன் நிறைமதி
என் வானில்
நித்ய பூரண சந்திரன் குழைத்த குளிர்...

கிழக்கும் மேற்கும்
மாறி மாறிப் பின்னும்
சுழல்கிறது உன் புவியில்..
செங்கதிர்ச் சிரிப்போடு
என் கிழக்கும் 
ஆரஞ்சுப் பந்து உருண்டோடும்
மேற்கும் புடைசூழ்ந்த இருக்கை எனது...

இணையில்லையே ..?
இணை தான் இணையுமா
என்ற லட்சம்கோடி மதிப்பிலான
வினா முற்றத்தில் கிடக்கிறது......

இது பால்வீதியின் மூன்றாவது வீடு !

வெள்ளி, பிப்ரவரி 22, 2013

அபி உலகம் -15


வாசல் வேம்பு வந்த கதை...
நீ வளத்தியா தாத்தா...?
தொட்டி ரோஜா 

தன சொப்பு நீரால் வளர்க்கும்
அபியிடம் எப்படிச் சொல்வது...?
"காக்கா போட்ட விதைம்மா..."
ஏன் போட்டுச்சு..?
வேப்பம் பழம் சாப்ப்ட்டுச்சா..அதான்..
அப்போ ஆப்பிள் குடுத்திருக்கலாம்ம்ம்ல ...
ம்ம்ம்ம் விழுந்த
நேரம் தாத்தாவும் நினைத்தார்
ஆப்பிள் மரம் பால்கனியில்
நீட்டும் கனியை...
***********************************
பாட்டியிடம் திருடிய வடையைக்
காகம் தவற விட்டால்
வடைமரம் முளைக்குமா...?

நூடுல்ஸ் எதில் காய்க்கும்..?

சாக்லேட் காயா பழமா...?
அபியின் கேள்விகளுக்கு
விடை அறிந்தால்
தாத்தாவைத் தொடர்பு கொள்ளுங்கள்...



புதன், பிப்ரவரி 20, 2013

சுயம் ...சுலபம்...




நானற்ற "நான்"ஆக
நான் இருந்தாலும்
"நீ"யற்ற  நீ
என்னுள் நிறைந்தாலும்
நான் நானாக இருத்தலும்
நீ நீயாக இருத்தலுமே
நாம்......

பால்வெளியின் சொற்களில்
"நீ" நான் ஆவதில்லை...
நான் "நீ" ஆவதில்லை
நான்-
நான் என்பது- என்னை !
"நீ""நான்" என்பது
உன்னை!

"நீ"யும் "நான்"உம
உலகு
சுலபமாகச் சுட்ட ஏதுவாக
"நாம்"....

செவ்வாய், பிப்ரவரி 19, 2013

வன தேவதா





பழுத்த இலைகளில்
பாதம்புதைய நடந்துகொண்டிருக்கிறேன் ..
இருள் கவிந்த வனத்தில்
என்றோ கவிந்ததன் எச்சமான
ஒளியின் சாயலில்
நடக்கிறேன்...
செவியுரசும் விழுது ...
வண்ணமோ வடிவமோ
வாழிடமோ காட்டாது
மணத்தால்
உடன் நடந்த பூ..
உணர்ந்தறியாக் குளிர்மையோடு
கால் நனைத்த நீர்ப் பெருக்கு,
தக்க உதாரணங்களோடு
சேகரித்தபடியே நடக்கிறேன்......
மழையுதிரும் மாலையிலோ,
நிலா வழியும் இராமணலிலோ
நாம் நடக்கையில்
கதைக்கத் தோதாக இருக்குமென...


ஒருவேளை.....
ஒளியின் தடம் தீண்டாமலே
என் பயணம் முடியவும் கூடும் ..
நெடுக அழைத்தபடி
நீ வரும் நாளில்
இந்தப் பழுப்புகள்
சருகாய் மொடமொடத்தால்
அதன் வழியே
நீ கேட்கலாம் என் சேகரங்களை.....
.
என் சிறகில் ஒளியிருந்ததைச்
சொல்லி அழாதே தயவுசெய்து
....!

ஞாயிறு, பிப்ரவரி 03, 2013

அபி உலகம் -12

அபியின் புதிய 
அணிகலன் 
வழக்கம்போல 
பொம்மைப்பெண் காதில்,....
பதறிய அம்மா 
"உலகமே தெரியலியேடி உனக்கு..
எனக் கலங்க ,
ஓடிப் போய் 
தாத்தாவின் புதுக் கண்ணாடியோடு 
வந்தாள் அபி.
"இதப் போட்டுக்கறேம்மா 
இனிமே செரியாயிடும் ......
*********************
 தொண தொவென பேசியபடி 
சுற்றிக் கொண்டிருந்தாள் அபி.
"நானே கவலையா 
இருக்கேன்...தெரியுதா உனக்கு ?
சும்மா இரு...."
...............
இருநொடிக்குப்பின் 
"கவலைன்னா என்னம்மா...?
சும்மா இருந்துவிட்டாள் 
அம்மா.

புதன், ஜனவரி 30, 2013

ஸ்னேஹலதாவுடன் ...



இந்த இக்கணம்
என்னுடையது....
காற்று அறையும் முகத்தில்
வந்து வந்து விழும்
கற்றை முடியொதுக்கி
ஒதுக்கி...
கைநோவதும் பொருட்டில்லை...

வெம்மையின் உப்பு பூசும்
ஒவ்வொரு நொடியும்
கூடிக் கூடி
என்னுடையதாகும்
கணங்களில் இருக்கிறேன்..

ஸ்னேஹலதாவைச்
சந்திக்கச் செல்லும்
இந்தப் பயணம் முக்கியமானது...

ஒவ்வொருமுறையும்
இந்தக் கணங்களைப் பற்றிக்
கதைத்திருப்பது
எங்கள் வழக்கம்...

எதுவும் சொல்லமாட்டாள்
இம்முறை.

புதிதாய் வாங்கிய
கண்ணாடி
முன் நெற்றிக் குழலைக்
கண்ணிலிருந்து தள்ளி வைப்பதால்
அந்தக் கற்றை
காரணமில்லை -
துளிர்த்து இறங்கும் துளிகளுக்கு..

நேற்றைய பயண விபத்தில்
மரித்து
கண்ணாடிப் பேழையில்
உறங்கும் ஸ்னேஹலதா
கேட்டிருந்த
இதன் ஜோடிக் குளிர்க் கண்ணாடி
என் கைப் பையில்...

திங்கள், ஜனவரி 21, 2013

ஜகன்மோகினி



நான்...
அனாமிகா...
வினோதினி...
தாட்சாயணி...
என் விரிசடையோ .
மூன்றாம் நேத்ரமோ ,
தோள் தொடும் தூக்கிய திருவடியோ
கை ஏந்திய எரிதழலோ,
காணவியலாக் கண்முன்னே
தலையாட்டி பொம்மைகள்
உருண்டு கொண்டிருக்கின்றன !
உருப் பெறும்
சாபவிமோசனம்
எப்போது -உன் கண்ணுக்கு?

சனி, ஜனவரி 05, 2013

நுழையா விருந்து




தேநீர்ப் பித்து
குளம்பி பக்தி
பால்மாப் பாலகர்
எல்லோருக்குமென
எடுத்தெடுத்து வைத்த
உறைபிரிக்காக் கோப்பைகளுக்குத்
துணை
சேர்த்துக் கொண்டேயிருக்கிறேன்
என்றேனும் பரிமாறும்
நம்பிக்கையில்..,
உன் புன்னகையில் தெரியும்
இகழ்ச்சி
என் கண்ணுக்கு தெரியும் .
என் விதைகள்
முளைவிடும் என்பதையோ
நீயும் உன் புன்னகையும்
அறிவதில்லை...

ஞாயிறு, டிசம்பர் 30, 2012

அறிவாய் செறிவாய்..


நீலமென்றோ...
மஞ்சளென்றோ ...
சிவப்பு என்றோ..
அறுதியிட முடியா
வண்ணக்குழம்பின் கரையில்
நின்று
இவளுக்கு நிறம் தேறத் தெரியுமோ...?
தொக்கிய கேள்வியும்
மக்கிய மனதுமாய்ப்
பார்த்திருக்கிறேன் ...
லாவகமாய்த்
தூரிகை பிடிக்கிறாய்..
வாழி மகளே !

செவ்வாய், டிசம்பர் 25, 2012

தவிப்பின் குரல்

பேசு..பேசாதே..
உன் கண்ணும்  மறைத்திருக்கலாம் ..         
பொட்டு வை..வைக்காதே..
சிறிது,பெரிது,...நீளம்..குட்டை..
உன் மேலாடை ,ஆபரணம்..
பழசு புதுசு..,
மாறு..,மாறாதே..,
சிரி.. பல் தெரியவேண்டாம்...
இருள் தவிர்..
ஒளியும் தவிர்..,

எதையும் சொல்லுங்கள் கேட்கிறேன்..
எந்த வயதில்,இடத்தில்,
நலம் அழிக்க வாய்ப்பிலாத
பத்திரம் தருவீர்..?

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...