மரவள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மரவள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, அக்டோபர் 30, 2021

இந்தபூமி விற்பனைக்கல்ல

 பள்ளியைவிட்டு வெளியே வந்தவுடன்

தின்பண்டக்கடைகள்
தெருமுனைதோறும்
குட்டியானைகள்
வெங்காயமோ
பூண்டோ
செவ்வாழையோ
மரவள்ளியோ
வைத்துக்கொண்டு
சிலேட்டுகளில் எழுதிய விலைநிலவரத்தோடு
மருத்துவமனைகளின் வாசலில்
பழைய பாட்டில்கள்
துண்டுகள்
கேன் டீ
இடியாப்பக் கூடைகள்
வீடு திரும்பு
வீடு திரும்பு
என்று
கூவுகின்றன
இன்ன பிற கீரைக்கட்டுகள்
பீங்கான் சாடிகள்
மல்லிகைச்சரங்கள்
இதையெல்லாம்
வாங்கிக்கொண்டு எங்கேதான் போக
வாங்காமல்
எங்கே போக

செவ்வாய், ஜூலை 13, 2021

கனமனம்

 சில்லிட்டுக்கிடக்கிறது

தரையெல்லாம்

உரச்சாக்கின்மேல்
கிடக்கும் மிச்ச மரவள்ளியையும் எடுத்துக்கொள்கிறாயா
என்று வெற்றிலை வழியச் சிரிக்கிறாள் அந்த ஆயா
"ரெண்டுகிலோவை வெச்சி நா என்ன செய்ய"
சங்கடமாக முனகினேன்
"காசு வோணாம்
எடுத்துட்டுப்போயி
அவிச்சி
என்னாட்டங் கிழங்கட்டைக்கு குடு"
பைக்குள் போட்டுவிட்டு
சாக்கைச் சுருட்டிக்கொண்டு
டெம்போவில்
நுழைந்துவிட்டாள்
பிறகுதான் என் தோள்பை வேதாளமாய்க் கனக்கிறது

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...