வியர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியர்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, மே 05, 2019

நின்றுகொண்டு வருபவள்

இந்த நாளிலும் 
சலனமற்ற முகங்கள்
அமர்ந்திருக்கின்றன
படியில் தொங்குகிறவன் 
வழக்கம்போல் ஓடிவருகிறான்
உயரக்கம்பியைக் 
கை தூக்கிப் பிடித்துக் கொள்கிறாள் அவள்
சாயமிழந்த
அடுத்தமுறை அணிகையில் 

நிச்சயம் கிழியப்போகிற
வெக்கையால் 

வியர்வை பொங்கிக்கிடக்கும் 
அந்த ரவிக்கை இடுக்கிலும் 
என்னவோ தெரிகிறது சிலருக்கு

வெள்ளி, மார்ச் 22, 2013

வரம் மறந்த கடவுளும் ஒரு யாசகியும்


"இப்படியாக இரு "
உன் வலது உள்ளங்கை
உயர்கையில்
உரத்துச் சொன்னாயோ...
முணுமுணுத்தாயோ.....
நான்
இப்படித்தான் இருக்கிறேன்.
நீ சொன்ன :இப்படி"
இதுதானா?
நெற்றி வியர்வையாய்
சுரந்து பெருகிய
சலிப்பின் துளிகளை
வழித்து ..வழித்து ..
அந்தரத்தில் எறிந்துவிட்டு
இப்படியாகவே-இருக்கிறேன்...
சலிப்பு பெருகி..பெருகி
சூழ்ந்த நீர்ப்பரப்பின்
மேலொரு தக்கையாகவும்
நான்
இப்படித்தான் இருக்கிறேன்..
உன் வரம்
உனக்காவது நினைவில் இருந்திருக்கலாம்
.

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...