பனித்துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பனித்துளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, அக்டோபர் 10, 2021

பெருவாழ்வே

 நறநறவென

குழல்விளக்குகளைக் கடித்துத் தின்பவனைப் பார்த்து வியந்தபோது
ஒரு வளையத்தில்
காலும்
இன்னொரு வளையத்தில் கையுமாகத் தாவிய
பார் விளையாட்டுப் பெண்ணை அண்ணாந்து பார்த்தபோது
பெட்டிக்குள் பெண்ணையனுப்பி
முயலை வரவழைத்தவனுக்காகக் கை தட்டியபோது
அறியவில்லை
அத்தனையும்
செய்வேனென்று
கண்ணீர்த் துளியத்தனையும்
இருளில் முகவரிதவறி
நிலவு சொட்டிய
பனித்துளி
என நான் சொல்லவும்
நீங்கள் நம்பவும்...

என் பெருவாழ்வே....

செவ்வாய், அக்டோபர் 16, 2018

கனவு செருகிய எறவாணம்

எதை நோக்கிதான் இத்தனை நடப்பது
சிறு அரளிக்கிளையை ஊன்றிக்கொண்டு
நடைக்கு கூட கசப்பேறிய பின்னும்

**********************************************************
கனவுகளைச்செருகிவைத்த எறவாணம் 
யானைவிரட்டலில் பிய்ந்துபோனது
குப்பை வாருவதில் நிற்கிறது கைவண்ணம்

**************************************************************

திரளும் கண்ணீரைத்
தொட்டு தொட்டு ஒற்றிப்பிழிந்து
நீர்வார்த்த முல்லையின் நிறம் 

அப்படித்தான் இருக்கும்

***************************************************************
பழமுதிரிலோ,உழவர் சந்தையிலோ 
பேரம் பேசியோ பேசாமலோ 
நீங்கள் வாங்கும் சுரை எல்லாம் 
முற்றித்தான் இருக்கிறது
இற்றுப்போன பால்யத்தின் 
கூரையில் எக்கி எக்கி
இழுத்துப்பிய்த்த சுரைப்பிஞ்சின் 
மென்மையை நினைவில் கிடத்தியிருக்கும்வரை

அந்தப்புறங்கையில் பாருங்கள்
அதே பனித்துளி

****************************************************************************

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...