வாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், நவம்பர் 01, 2021

கடன்வாங்கிக் கூட்டல்

 உமட்டுது

உமட்டுது
இதுதான் அவள் அதிகம் பயன்படுத்திய
சொல்லாயிருக்கும்
இந்த பத்துமாத ஆட்டத்தில்
ஒரே சொல்லை திரும்பத்திரும்பச்
சொல்லியமைக்காக
விலக்கி விடுவீர்களா என்ன
பை ரன்னராகவும் முடியாமல்
வேடிக்கை பார்க்கிறவரே
ஒரு முதுகு தடவலோ
வாந்தி சுத்திகரிக்க
ஒரு குவளை நீரூற்றலோ செய்கிறவனிடம்
கொஞ்சம் கரிசனம்
கடன் வாங்க முயன்றாலென்ன
அப்புறம் ஒரு விஷயம்
இது கடன் வாங்கிக் கழித்தல் அல்ல
கடன்வாங்கிக் கூட்டல்

************************************************
தூக்கிச்செருகிய குதிரைவால் கொண்டையுடன்
மேசையடியில் உட்கார்ந்திருக்கும் சிறுமி
அச்சு அசல்
மகள் போலவே முறைக்கிறாள்
அவள் அண்ணனோ
மகன் போலவே அவளிடம் வம்பிழுக்கிறான்
புதிதாக வந்திருக்கும் விளம்பரம்
சில மாதங்களாவது
கடந்துபோன பிள்ளைகளின் பால்யத்தை
தினம் சில விள்ளல்களாகத் தரக்கூடும்.
அடுத்தடுத்த தடவைகளில்
அவள் கண்டுபிடித்து நினைவு கூரக்கூடும்
இதே வட்டக்கழுத்து சட்டை அவனிடம்
வேறு நிறத்தில் இருந்ததையும்
மகளின் சீருடை கட்டங்களுக்குப் பதிலாக
கோடுகள்
ஆனால் அதே நிறமென்பதையும்
இன்னும் சிலபல
ஒற்றுமை வேற்றுமைகளையும் கூட
******************************************

திங்கள், நவம்பர் 16, 2015

துயரங்களின் பின்வாசல்


மையோ மரகதமோ அய்யோவும்
அதோ அவள்
வயிறெரிந்து கூவுகிறாளே
அந்த அய்யோவும் ஒன்றாகுமா
வீட்டைப்பற்றி நினைவே இல்லாமல்
அப்பன் விழுந்து கிடந்த
சாராயக்கடையிலேயே
தட்டு ஏந்திவருகிறான் ஒருவன்
தம்ளர் பிடிக்கிறான் பிறிதொருவன்
சங்கிலித் தொடர் விளைவு
பற்றிய உங்கள் கோட்பாடுகள்
அங்கே வழிந்து கிடக்கிறது
எவனோ எடுத்த வாந்தியாக
முன்பெல்லாம்
விரைவில் அல்லது எப்போதாவது
எல்லாம் மாறிவிடும்
என்று தோன்றிக் கொண்டிருந்தது
சமீபமாக
எதுவும் தோன்றுமளவு
பொழுது புலர்வதேயில்லை
பாதையோரம் போகும் சிறுமியின்
கைப்பண்டத்துக்கு விளையாட்டாய்
கையேந்துபவனைப் பார்த்து
விரட்டுகிறாள்
அறிவில்ல..பச்சப்புள்ள பண்டத்தப்
பங்கு கேக்குறியே ....
பக்கத்துப் பெட்டிக்கடையில்
நாளிதழின் போஸ்டர்
ஆடுகிறது
டாஸ்மாக் இலக்கு செய்தியோடு

வாழ்ந்தா....

  மாரியம்மன் கோயில் வாசலில் ஆடும் தோரணங்களையும் பொங்கல் அடுப்பு புகைமூட்டத்தையும் ஒன்றின்மேல் ஒன்றாக சரசரக்கும் காக்காய்ப்பொன் சரிகைப் பாவா...